மீனுக்கு விரித்த வலையில் சிக்கிய முதலை!

0
103
#image_title

மீனுக்கு விரித்த வலையில் சிக்கிய முதலை!

அரியலூர் மாவட்டம் குருவாடி கிராமத்திற்கு அருகில் கொள்ளிடம் ஆறு செல்கிறது.

இந்நிலையில் குருவாடி கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் தனது வயலில் அமைந்துள்ள மீன் குட்டையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது மீன் வலையை இழுத்தபோது பாரமாக இருந்த நிலையில் இரண்டு மூன்று பேர் சேர்ந்து மீன் வலையை வெளியே எடுத்துப் பார்த்தப்போது, அதில் முதலை சிக்கியிருந்தது தெரிய வந்தது இதனால் அதிர்ச்சியடைந்த தேவேந்திரன் மீன்வளையில் இருந்த முதலையை பிடித்து கயிற்றால் கட்டி வைத்தார்.

இது குறித்து தூத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது புகாரின் பேரில் போலீசார் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் முதலையைப் பிடித்து அணைக்கரையில் விடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குருவாடிக்கு அருகே செல்லும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து முதலை வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

author avatar
Savitha