விழுப்புரம் மாவட்டத்தில் நேர்ந்த சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே மருத்துவர் பலி..

0
261
A doctor died on the spot in a road accident in Villupuram district.
A doctor died on the spot in a road accident in Villupuram district.

விழுப்புரம் மாவட்டத்தில் நேர்ந்த சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே மருத்துவர் பலி..

செஞ்சி அருகேவுள்ள கீழ் மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் இவரின் மகன்  கே.வினோத் இவருடைய வயது 39. இவர் புதுவை மாநிலம்  மதகடிப்பட்டியிலுள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில்  நேற்று வினோத் தனது காரில் புதன்கிழமை பிற்பகல் ஒரு மணி அளவில் சென்னையிலிருந்து புதுச்சேரியை  நோக்கி சென்று கொண்டிருந்தார். மரக்காணம் அருகே கழுக்குப்பம் பகுதியில் இவர் கார் சென்று கொண்டிருந்தது.

அப்போது டாக்டரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்று சாலையோரத்தில் உள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த வினோத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைக் கண்ட சாலையில் உள்ளவர்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வினோத்தின் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக புதுச்சேரி கனகசெட்டி குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்தை குறித்து மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மருத்துவர் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

author avatar
Parthipan K