திரைப்பட பணியில் போலீசாரை தள்ளிவிட்டு அணையில் விழுந்து இரட்டை ஆயுள் குற்றவாளி! வலைவீசும் போலீஸ்!

0
99
A double life convict after pushing the police in the film work fell into the dam! Netting police!
A double life convict after pushing the police in the film work fell into the dam! Netting police!

திரைப்பட பணியில் போலீசாரை தள்ளிவிட்டு அணையில் விழுந்து இரட்டை ஆயுள் குற்றவாளி! வலைவீசும் போலீஸ்!

கேரளா மாநிலம் இடுக்கி ராஜாக்காடு பொன்முடியை சேர்ந்தவர் களப்புரைல் ஜோமோன் இவர் கடந்த 2015ம் ஆண்டு கோட்டயம் பேருந்துநிலையத்தில் ராஜேஷ் என்பரை கொலை செய்த வழக்கில் ஜோமோன் முக்கிய குற்றவாளி என்பதால் அவருக்கு கோட்டயம் முதன்மை நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. இதனை தொடர்ந்து கண்ணூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகிறார்.

தனது வயதான பெற்றோரை சந்திக்க வேண்டும் என்ற கோரி பல முறை பரோல் விண்ணப்பித்தும் கிடைக்காததால் தற்பொழுது ஒரு நாள் மட்டும் தற்காலிக பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறையில் இருந்து இரண்டு போலீஸ் அதிகாரிகளின் பாதுகாப்பில் ராஜாக்காடு பொன்முடியில் உள்ள வீட்டிற்கு ஜோமோன் அழைத்து வந்த போது ஜீப்பிலிருந்து இறங்கி வீட்டிற்குள் செல்லும் போது போலீசாரை தள்ளிவிட்டு விட்டு அருகில் இருந்த வனப்பகுதிக்குள் தப்பி ஓடினார். தப்பியோடிய ஜோமோனை போலீசார் தேடி வருகின்றனர். பொன்முடி அணையில் நீந்தி செல்ல முடியும் என்பதால் அணைப்பகுதியிலும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

author avatar
Preethi