கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலியில் ஆம்புலன்சில் செல்லும் போதே நிகழ்ந்த ருசிகர சம்பவம்!! 

0
32
a-funny-incident-happened-to-a-pregnant-woman-in-labor-while-going-to-the-ambulance
a-funny-incident-happened-to-a-pregnant-woman-in-labor-while-going-to-the-ambulance

கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலியில் ஆம்புலன்சில் செல்லும் போதே நிகழ்ந்த ருசிகர சம்பவம்!! 

பிரசவ வலி எடுத்த பெண்ணை 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போது வழியிலேயே அவருக்கு பிரசவமானது.

108 ஆம்புலன்சில் கர்ப்பிணியை அழைத்துச் சென்ற போது பிறந்த ஆண் குழந்தை. தாயும்,சேயும் நலம்.

திருவண்ணாமலை தாலுக்கா  நூக்கம்பாடி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார். இவரது மனைவி தீபா வயது 28. தீபா நிறைமாத கர்ப்பிணி ஆவார். இந்த சூழ்நிலையில் நேற்று காலை அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனே அவரது குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

நூக்கம்பாடியில் இருந்து மங்கலம் வலியே ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது தீபாவிற்கு பிரசவ வலி அதிகரித்துள்ளது. இதனால் உடனடியாக விரைந்து செயல்பட்ட மருத்துவ உதவியாளர் செல்வி ஆம்புலன்சை ஓரமாக நிறுத்துமாறு டிரைவர் தினகரனிடம் கூறினார்.

பின்னர் டிரைவர் ஆம்புலன்ஸை ஓரமாக நிறுத்தவே அங்கேயே மருத்துவ உதவியாளர் செல்வி தீபாவிற்கு பிரசவம் பார்த்தார். அதில் தீபாவிற்கு அழகான ஆண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்தது. இதையடுத்து தாயும் சேயும் பத்திரமாக மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி அளிக்கப்பட்டு  தற்போது தாயும், குழந்தையும் நலமாக உள்ளதாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவசர காலத்தில் விரைந்து செயல்பட்ட மருத்துவ உதவியாளர் செல்வியை மருத்துவர்கள் பாராட்டினர்.