வீட்டின் தென்மேற்கு மூலையில் இதை ஒரு கைப்பிடி வைத்தால் பணம் மழை கொட்டுவது உறுதி!

0
441
#image_title

வீட்டின் தென்மேற்கு மூலையில் இதை ஒரு கைப்பிடி வைத்தால் பணம் மழை கொட்டுவது உறுதி!

பணம் என்றால் பிறந்த குழந்தைக்கு கூட ஆசை இருக்கும். அந்த அளவிற்கு பணத்தின் மீதான மோகம் அனைவரிடத்திலும் இருக்கின்றது. சுப, துக்க நிகழ்விற்கு பணத் தேவை இன்றியமையாதது.

சொல்லப் போனால் பணம் தான் வாழ்க்கை… பணம் இல்லாவிட்டால் இந்த உலகில் வாழ்வது மிகவும் கடினமான விஷயம். இவ்வாறு தனது ஆதிக்கத்தை செலுத்தி வரும் பணத்தை பெருக்க.. அதன் வரவு அதிகரிக்க சில்லறை காசு கொண்டு பரிகாரம் நல்லது.

பரிகாரம் செய்வது எப்படி…

ஒரு கைப்பிடி அளவு சில்லறை காசுகளை ஒரு கிண்ணத்தில் போட்டு பன்னீர் ஊற்றி துடைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு கிண்ணத்தில் போட்டு பூஜை அறையில் வைத்து தூப தீபம் காட்டவும்.

பிறகு அந்த சில்லறை காசு கிண்ணத்தை வீட்டின் தென்மேற்கு மூலையில் யார் கண்களுக்கும், கைகளுக்கும் படாத இடத்தில் வைத்து விடவும்.

இவ்வாறு செய்வதினால் பணப் பிரச்சனை நீங்கி பண வரவு அதிகரிக்கும்.