அயோத்தியாப்பட்டணம் அருகே கல்குவாரியில் கூலித்தொழிலாளி மர்ம சாவு! நடந்தது என்ன?

0
123
A laborer died mysteriously in a quarry near Ayodhyapatnam! what happened?
A laborer died mysteriously in a quarry near Ayodhyapatnam! what happened?

அயோத்தியாப்பட்டணம் அருகே கல்குவாரியில் கூலித்தொழிலாளி மர்ம சாவு! நடந்தது என்ன?

தர்மபுரி மாவட்டம் நாகர்கூடல் கிராமத்தைச் சேர்ந்தவர் சாம்ராஜ். இவருடைய வயது 34. சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே மின்னம்பள்ளி செல்லியம்மன் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியில் தான்  சாம்ராஜ் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் கல்குவாரியில் கவிழ்ந்து கிடந்த டிராக்டருக்கு அருகில் இவரது உடல் சிதைந்து ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தது.அங்கு வேலைபார்க்க  சென்றவர்கள் சடலத்தை கண்டதும் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த காரிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் சாம்ராஜ்சாவின் சந்தேகம் இருப்பதாகவும் மேற்கண்ட விசாரணையை எடுக்குமாறும் உறவினர்கள் போலீசாருடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார்கள். இதனால்  அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு நிலவி வந்தது. இதையெடுத்து போலீசார் சாம்ராஜ் உறவினர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக கூறி உறுதியளித்தனர். இதன் பின்னர் உயிரிழந்த சாம்ராஜ்யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் காரிப்பட்டி போலீசார் மர்ம சாவி என வழக்கு பதிவு செய்து மேற்கொண்ட விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் கல்குவாரியில் வெடி விபத்து நடந்து சாம்ராஜ் இறந்தாரா?மர்ம கும்பலால் அவர் தாக்கப்பட்டாரா? இல்லை,டிராக்டருடன் தவறி விழுந்து பலியானாரா ? என பல கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
Parthipan K