தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரொனா சிகிச்சை-யில் இருந்த ஒருவர் பலி!!

0
210
#image_title

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரொனா சிகிச்சை-யில் இருந்த ஒருவர் பலி!!

தூத்துக்குடி பாத்திமா நகர் பகுதியை சேர்ந்த சேவியர் மகன் பார்த்திபன்(54) என்பவருக்கு நூரையீரலில் கட்டி இருந்ததால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனை-யில் சிகிச்சை-க்கு அனுமதிக்கப்பட்ட-போது அங்கு அவருக்கு கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சோதனையில் அவருக்கு கொரொனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அவரை கடந்த மாதம் 23–3.2023-ம் தேதி அன்று கொரொனா தொற்று காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை-க்கு அனுமதிக்கப்பட்டன. இந்நிலையில் கொரொனா சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

தூத்துக்குடியில் மீண்டும் கொரொனா பரவல் ஆரம்பித்து இருப்பதும் அதில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் குறித்த செய்தியும் மக்கள் மத்தியில் பதட்டத்தினை ஏற்படுத்தி உள்ளது.

Previous articleஅதானி விவாகரம்!! கோபத்தில் பதில் அளித்த ராகுல் காந்தி!!
Next articleராமநவமி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட வன்முறை : 130க்கும் மேற்பட்டோர் கைது!!