புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தும் மாத்திரை!! ஆய்வில் வெளியான மகிழ்ச்சி தகவல்!!

Photo of author

By Divya

புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தும் மாத்திரை!! ஆய்வில் வெளியான மகிழ்ச்சி தகவல்!!

Divya

கேன்சர் உலகின் கொடிய நோய் பாதிப்புகளில் ஒன்றாக இருக்கின்றது.இந்த கேன்சர் பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் உரிய சிகிச்சை மூலம் குணப்படுத்திக் கொள்ளலாம்.ஆனால் கேன்சர் பாதிப்பு ஆரம்ப நிலையை கடந்துவிட்டால் குணப்படுத்துவது சவாலான விஷயமாகிவிடும்.

புற்றுநோய் பல்வேறு காரணங்களால் வருகிறது.வாழ்க்கைமுறை,பாலியல் சார்ந்த பிரச்சனை,புகைப்பழக்கம்,மோசமான உணவுப் பழக்கம் என்று பல காரணங்களால புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது.மனித உடலில் கட்டிகள் போன்று உருவாகும் புற்றுநோய் நாளடைவில் உடைந்து உடலின் மற்ற பாகங்களுக்கு பரவுகிறது.

இந்த புற்றுநோய் பாதிப்பு நடுத்தர வயதினரையே அதிகம் பாதிக்கிறது.இந்த புற்றுநோய் பாதிப்பை குணப்படுத்த மருந்து,மாத்திரைகள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் ஆஸ்பிரின் மாத்திரை புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடுகிறது என்ற பிரிட்டன் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.நடுத்தர வயதினர் மற்றும் முதிய வயதினர் இருதய நோய்,புற்றுநோய் போன்ற பாதிப்புகளை அதிகமாக சந்திக்கின்றனர்.இந்த பாதிப்புகள் குறைய ஆஸ்பிரின் மாத்திரையை தினமும் எழுபத்து ஐந்து மில்லி கிராம் அளவிற்கு உட்கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

ஆஸ்பிரின் என்பது வலி நிவாரணி மாத்திரை ஆகும்.இந்த ஆஸ்பிரின் மாத்திரை உடலில் புற்றுநோய் செல்களை கண்டறிந்து அழிக்கும் தன்மையை கொண்டிருக்கிறது.இந்த ஆஸ்பிரின் மாத்திரை அனைத்து மருந்தகங்களிலும் குறைவான விலையில் கிடைக்கும்.இருப்பினும் நீங்கள் மருத்துவர் ஆலோசனை இன்றி எடுத்துக் கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.நீங்கள் அளவிற்கு அதிகமாக ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிட்டால் கடுமையான பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.

மேலும் ஆஸ்பிரின் மாத்திரை புற்றுநோய் செல்களை முழுமையாக அழிக்குமா என்ற ஆராய்ச்சி இன்றுவரை நடந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.