சர்க்கரை நோய் குணமாக குடிக்க வேண்டிய பவர்புல் கஷாயம்!! இந்த மரப்பட்டையை மிஸ் பண்ணிடாதீங்க!!

Photo of author

By Divya

சர்க்கரை நோய் குணமாக குடிக்க வேண்டிய பவர்புல் கஷாயம்!! இந்த மரப்பட்டையை மிஸ் பண்ணிடாதீங்க!!

Divya

இரத்தத்தில் இருக்கின்ற சர்க்கரை அளவு கட்டுப்பட இந்த மூலிகை கஷாயம் செய்து தினமும் குடிங்க.மருந்து,மாத்திரை எதுவும் இல்லாமல் இதனை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:-

1)வசம்பு
2)மருதம்பட்டை
3)நாவல் மரப்பட்டை
4)குப்பைமேனி
5)மர மஞ்சள்
6)கொன்றைமரப்பட்டை
7)தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

மருதம்பட்டை,நாவல் மரப்பட்டை,உலர்ந்த குப்பைமேனி இலை,மர மஞ்சள்,கொன்றை மரப்பட்டை மற்றும் வசம்பு ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.உதாரணத்திற்க்கு மருதம்பட்டை 50 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால் இதர பொருட்களையும் 50 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பொருட்கள் அனைத்தையும் ஒருமுறை வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பொடியை காற்றுப்புகாத டப்பாவில் கொட்டி சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.அதன் பிறகு அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி அளவு அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.அரை கிளாஸ் அளவிற்கு சுண்டி வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர் இதை ஒரு ஆறவைத்து கிளாஸிற்கு வடிகட்டி பருக வேண்டும்.தினமும் ஒருமுறை இந்த கஷாயம் செய்து குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு முழுமையாக கட்டுப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)நாவல் விதை
2)பட்டை
3)வெந்தயம்
4)கொய்யா இலை

செய்முறை விளக்கம்:-

நாவல் விதை ஒரு கப்,இலவங்கப்பட்டை நான்கு,இரண்டு தேக்கரண்டி வெந்தயம் மற்றும் பத்து கொய்யா இலைகளை வெயிலில் நன்றாக காய வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இவற்றை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பொடியை ஒரு டப்பாவில் கொட்டி சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு பாத்திரத்தில் ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி அளவு அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.