உங்களுக்கு விடப்பட்ட பிரம்ம சாபத்தில் இருந்து நீங்க எளிய பரிகாரம்!!

0
40
#image_title

உங்களுக்கு விடப்பட்ட பிரம்ம சாபத்தில் இருந்து நீங்க எளிய பரிகாரம்!!

சாபங்களை நாம் நேரடியாக பெறாவிட்டாலும் நம் முன்னோர்கள் இந்த சாபங்களைப் பெற்றிருந்தால் அது வம்சா வழியாகத் தொடர்ந்து தலைமுறை சாபமாக மாறி நம்மையும் நம் சந்ததியையும் தாக்கிக் கொண்டு தான் இருக்கும்.

இப்படிப்பட்ட சாபங்கள் நம் கஷ்டம் / பிரச்சனைகள் / துன்பம் / துயரம் அனைத்திற்கும் காரணமாக இருந்து நம் முன்னேற்றத்தையும், செல்வ வளத்தையும், புத்திர பாக்கியத்தையும், திருமண யோகத்தையும், கல்வி செல்வத்தையும் இன்னும் பல விதமான விஷயங்களையும் பாதித்து அனைத்திற்கும் தடையாக இருக்கும்.

பல வகையான சாபங்களில் இந்த 11 சாபங்கள் மிகவும் பாதிப்புகள் தரக் கூடியவை. அவை பெண் சாபம், பித்ரு சாபம், பிரம்ம சாபம், சர்ப்ப சாபம், கோ சாபம், கங்கா சாபம், விருக்க்ஷ சாபம், தேவ சாபம், முனி சாபம், ரிஷி சாபம், குல தெய்வ சாபம் ஆகியவை.

இப்படி ஏதும் சாபம் நமக்கு இருக்கிறதோ என்று ஜாதகத்தின் மூலமோ அல்லது வேறு விதத்திலோ கண்டறிந்து அதிலுருந்து விடுபட வேண்டும்.

பிரம்ம சாபம்: ஏன் நம்மைத் தொடர்கிறது…

நம் குருவை அவமதிப்பது, கேலி கிண்டல் செய்வது, வித்தை கற்ற பிறகு குருவிற்கு துரோகம் செய்வது, கற்ற வித்தையை தவறாகப் பயன்படுத்துவது, வித்தையை மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்காமல் இருப்பது.

பிரம்ம சாபம்: என்ன விளைவுகளை ஏற்படுத்தும்..

என்ன படித்தாலும் நினைவில் புதியது. எந்த கல்வியும் பலிதம் ஆகாது. நம் பிள்ளைகள் படித்து பட்டம் வாங்கி நல்ல நிலையில் அமர்ந்து சம்பாதிக்க இயலாது.

பிரம்ம சாபத்தில் இருந்து விடுபடுவது எப்படி?

குரு மார்களை வணங்க வேண்டும். கற்ற வித்தையை ஒளிக்காமல் பிறருக்கு சொல்லி கொடுக்க வேண்டும். குருமார்களின் குருவான தக்ஷினாமூர்த்திக்கும் குல தெய்வத்திருக்கும் வழிபாடு செய்து மனதார மன்னிப்பு கேட்டு படிக்க இயலாதவர்களுக்கு படிக்க உதவி செய்வது. இவ்வாறு செய்வதன் மூலம் பிரம்ம சாபத்தில் இருந்து விடுபட முடியும்.