உங்கள் வீட்டில் பணத் தட்டுப்பாடு நீங்கி பணம் வந்து கொண்டே இருக்க எளிய பரிகாரம்!!

0
35
#image_title

உங்கள் வீட்டில் பணத் தட்டுப்பாடு நீங்கி பணம் வந்து கொண்டே இருக்க எளிய பரிகாரம்!!

தீர்வு 01:

வீட்டில் கற்பூரம் காட்டும் போது அதில் 2 இலவங்கத்தை எரிய விடவும். வீட்டில் உள்ள அனைத்து மூலிகைகளிலும் அந்த கற்பூர புகையை காட்டவும்.

தினமும் வீட்டில் கற்பூரம் காட்டுவது மிகவும் நல்லது. முடியாதவர்கள் செவ்வாய், வெள்ளி போன்ற நாட்களில் கட்டாயம் கற்பூரம் காட்டவும்.

அதேபோல் விளக்கு ஏற்றும் போது விளக்கில் உள்ள எண்ணெயில் ஒரு சிறிய துண்டு பச்சைக் கற்பூரம் போட்டு இரண்டு இலவங்கத்தை போட்டுஏற்றவும்.

வாரம் இரு முறை பழையதை மாற்றவும். தொடர்ந்து 2 மாதங்கள் செய்து வர நல்ல மாற்றம் இருக்கும்.

தீர்வு 02:

செவ்வாய் அல்லது வெள்ளி அன்று இதை செய்யவும். ஒரு கண்ணாடி கிளாஸில் பச்சரிசி நிரப்பி பெரிய துண்டுகள் பச்சைக் கற்பூரம் 3 வைத்து அதன் நடுவில் 3 மயிலிறகு சொறுகி வைக்கவும்.

இதை உங்கள் வீட்டு ஹாலில் எதாவது ஒரு இடத்தில் வைக்கவும். வெளி ஆட்கள் கைகள் தொடாமல் பார்த்துக் கொள்ளவும்.

48 நாட்களுக்குப் பிறகு பச்சரிசியை மாற்றவும். பழையதை கால் படாத இடத்தில் போடவும். மயிலிறகு அதையே பயன்படுத்தலாம்.

பச்சைக் கற்பூரம் கரைந்து இருக்கும். புதிதாக வைக்கவும். 3 மாதத்திற்குள் நல்ல முன்னேற்றம் தெரியும்.

தீர்வு 03:

வெள்ளிக் கிழமை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை இதை செய்யவும். ஒரு சிறிய தட்டில் 5 ரூபாய் நாணயத்தை வைக்கவும்.

ஒரு உப்பு ஜாடியில் உப்பைக் கொட்டி அந்த ஜாடியை அந்த நாணயத்தின் மீது வைக்கவும். அடுத்த வெள்ளி அன்று வேறு வேறு நாணயம் வைத்து பழையதை சேர்த்து வைக்கவும்.

தொடர்ந்து 2 மாதங்கள் வரை செய்து வர நல்ல முன்னேற்றம் இருக்கும்.