கண் திருஷ்டி நீங்கி வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்க மற்றும் பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்!!

0
96
#image_title

கண் திருஷ்டி நீங்கி வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்க மற்றும் பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்!!

கண் திருஷ்டி என்றால் இருக்கும் ஒருவரை பார்த்து இல்லாதவர் பொறாமைப்படுவது என்று சொல்லப்படுகிறது. புதிதாக வீடு கட்டினால் வீட்டிற்கு முன் கண் திருஷ்டி விநாயர்கள் படங்களை மாட்டுவது, வீட்டு வாசல் கதவுகளில் எலுமிச்சை பழத்தை நூலில் கோர்த்து தொங்க விடுவது என்று பல முறைகளை கடைபிடித்து வருகிறோம். காரணம் யாருடைய கெட்ட பார்வையும் வீட்டின் மேல் படக்கூடாது என்பதற்காக தான். நம் குடும்பத்தில் கஷ்டத்தை தரும் கண் திருஷ்டி நீங்கி பண வரவு அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

கண் திருஷ்டி நீங்கி வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்க மற்றும் பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்:-

தீர்வு 1:

ஒரு கண்ணாடி டம்ளர் அல்லது பாட்டில் எடுத்துக் கொள்ளவும். அதில் தண்ணீர் ஊற்றி சிறிது மஞ்சள் தூள் போட்டு 3 மயிலிறகை அதில் வைத்து விடவும்.

இதை உங்கள் வீட்டு ஹாலில் யார் கையும் படாதவாறு ஒரு இடத்தில் வைத்து விடவும். 2 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீரை மாற்றவும். பழைய தண்ணீரை வீட்டிற்கு வெளியே கால் படாத இடத்தில் ஊற்றவும்.

மயிலிறகை மாதம் ஒரு முறை மாற்றி பழையதை கால் படாத இடத்தில் போடவும். தொடர்ந்து 2 மாதங்கள் செய்து வர பிரச்சனைகள் தீர்வதைக் கண்கூடாகப் பார்க்க முடியும்.

தீர்வு 2:

ஒரு கண்ணாடி டம்ளரில் முக்கால் பாகம் தண்ணீர் ஊற்றி கால் பாகம் பன்னீர் ஊற்றி சிறிது மஞ்சள் தூள் சேர்த்து ஒரு பழுத்த எலுமிச்சையை அதில் போட்டு வீட்டில் ஹாலில் ஏதாவது ஒரு கை படாத இடத்தில் வைக்கவும்.

போட்டவுடன் மிதந்தால் எதிர்மறை ஆற்றல் அவ்வளவாக இல்லை என்று அர்த்தம். போட்டவுடன் உள்ளே விழுந்து அடியில் நின்று விட்டால் எதிர்மறை ஆற்றல் உள்ளது என்று அர்த்தம்.

வீடாக இருந்தால் செவ்வாய் மற்றும் வெள்ளி அன்று மட்டும் இதை மாற்றினால் போதும்.
பழைய நீரை வீட்டிற்கு வெளியே ஓரமாக ஊற்றி விடவும். பழத்தை வெளியே குப்பையில் போட்டு விடவும்.

தொடர்ந்து செய்யும் போது பழம் மிதக்க ஆரம்பித்து திருஷ்டி விலகி பணம் சேர ஆரம்பிக்கும்.
வியாபார ஸ்தலமாக இருந்தால் தினமும் செய்யவும்.