Astrology

உங்கள் வீட்டு பீரோவில் பணம் நிரம்பி வழிய நீங்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்..!

உங்கள் வீட்டு பீரோவில் பணம் நிரம்பி வழிய நீங்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்..!

இன்றைய உலகில் பணம் இல்லாத வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியாது. எதற்கும் பணம் என்ற நிலையில் தான் உலகம் இயங்கி கொண்டிருக்கிறது. ஒவ்வொரு விஷயத்திற்கும் பணம் தான் பேசுகிறது.

இந்த பணத்தை கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும்… அதை சேமிக்க முடியவில்லை என்ற வருத்தம் அனைவரிடத்திலும் இருக்கத் தான் செய்கிறது. இவ்வாறு பணத்தை சேமிக்க முடியவில்லை என்று வருந்தும் நபர்கள்… வன்னி மர பரிகாரம் செய்தால் பணம் கொட்டச் செய்யும்.

வன்னி மரம் எங்கு இருக்கிறதோ அங்கு சிறிது கல் உப்பு, கருப்பு எள் மற்றும் வெல்லத்தை சுற்றி கொட்டவும்.

இந்த மூன்று பொருட்களுக்கும் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் இருக்கின்றது. பிறகு வன்னி மரத்திற்கு முன்னர் ஒரு அகல் விளக்கு வைத்து அதில் கடுகு எண்ணெய் ஊற்றவும்.

பிறகு இரண்டு பஞ்சி திரி போட்டு தீபம் ஏற்றவும். பிறகு பணம் சேர வேண்டும்… என்று மனதார வேண்டிக் கொள்ளவும். இவ்வாறு 11 தினங்கள் தொடர்ந்து செய்து வந்தால் பண வரவு பல மடங்கு அதிகரிக்கும்.