பேய் ஓட்டுவது போல இளம்பெண் பாலியல் வன்கொடுமை!!! உத்திர பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி!!!

0
28
#image_title

பேய் ஓட்டுவது போல இளம்பெண் பாலியல் வன்கொடுமை!!! உத்திர பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி!!!

பாஜக கட்சி ஆளும் மாநிலமான உத்திரபிரதேச மாநிலத்தில் பேய் ஓட்டுவது போல இளம்பெண் ஒருவரை சாமியார் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் 52 வயதுடைய மோதிலால் என்பவர் தன்னை சாமியார் என்று கூறிக் கொண்டு வசித்து வந்தார். இதையடுத்து மோதிலால் ஆசாமியாரிடம் மிர்சாபூர் பகுதியை சேர்ந்த குடும்பத்தினர் அவர்களின் 18 வயது பெண்ணுக்கு பிரச்சனை இருப்பதாகவும் அந்த பியச்சனையை தீர்த்து வைக்க வேண்டும் என்றும் கூறி ஆசாமியிடம் வந்தனர்.

இதையடுத்து ஆசாமி மோதிலால் அந்த குடும்பத்தினரிடம் “பெண்ணுக்கு பேய் பிடித்திருக்கின்றது. பேயை ஓட்டுவதற்கு பூஜைகள் செய்வதற்கு 4000 ரூபாய் செலவு ஆகும்” என்று கூறினார். இதையடுத்து அந்த அப்பாவி குடும்பத்தினரும் ஆசாமி மோதிலால் பேச்சை நம்பி கேட்ட பணத்தை கொடுத்துள்ளனர்.

இதையடுத்து பேயை ஓட்ட வேண்டும் என்றால் பேய் பிடித்த பெண்ணை மட்டும் தனியாக அழைத்துக் கொண்டு சென்று பூஜைகள் செய்துதான் பேயை ஓட்ட வேண்டும் என்று குடும்பத்தினரிடம் கூறிவிட்டு அந்த இளம்பெண்ணை ஒதுக்குப்புறமாக இருக்கும் கோவிலுக்கு ஆசாமி மோதிலால் தனியாக அழைத்து சென்றார்.

அங்கு சென்ற அந்த ஆசாமி மோதிலால் அந்த இளம்பெண்ணுக்கு பேய் ஓட்டுவது கூறி அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இது குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என்றும் ஆசாமி மோதிலால் கூறியுள்ளார்.

இதையடுத்து வீட்டுக்கு சென்ற இளம்பெண் தனக்கு நடந்த கொடுமையை குறித்து குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதையடுத்து பெண் கூறியதை வைத்து குடும்பத்தினர் காவல் துறையினரிடம் ஆசாமி மோதிலால் மீது புகார் அளித்தனர்.

இதையடுத்து குடும்பத்தினர் அளித்த புகாரை வழக்காக பதிந்த காவல் துறையினர் அந்த ஆசாமி மோதிலால் அவர்களை அதிரடியாக கைது செய்தனர். பேய் ஓட்டுவதாக கூறி இளம்பெண் ஒருவர் சாமியாரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் உத்திரப் பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.