வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபர்! சோதனை செய்த போது மருத்துவர்கள் அடைந்த அதிர்ச்சி! 

0
186
#image_title

வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபர்! சோதனை செய்த போது மருத்துவர்கள் அடைந்த அதிர்ச்சி! 

வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபரின் உடலில் இருந்து தேவையற்ற பொருட்கள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியை சேர்ந்தவர் சங்கர் வயது 24.  இவர் அதிகமாக மது குடிக்கும் பழக்கம் உடையவர். இதனால் அவர் சென்னையில் உள்ள தனியார் மறுவாழ்வு மையத்தில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் இந்தாண்டு ஜனவரி மாதம் வரை 4 மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்றார். அப்போது அங்கு ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக சங்கர் பல்வேறு பொருட்களை எடுத்து விழுங்கியுள்ளார். இதனால் அவருக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஒரு மாத காலமாக கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டார். பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் அவருக்கு  உரிய நிவாரணம் கிடைக்கவில்லை.

இதனால அவர் கடந்த மாத 30ஆம் தேதி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அப்போது அவர் வயிற்றில் சோதனை செய்த டாக்டர்கள் தேவையற்ற பொருட்கள் இருப்பதை கண்டறிந்தனர். எனவே அறுவை சிகிச்சை மூலம் அவற்றை அகற்ற முடிவு செய்தனர்.

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர். நாராயணசாமி வழிக்காட்டுதலின் படி டாக்டர். வி.டி.அரசு தலைமையில் டாக்டர்கள் ராமதாஸ், சேரன், தீனதயாளன் ஆகியோர் கொண்ட குழுவினர் சங்கருக்கு அறுவைசிகிச்சையை மேற்கொண்டனர்.

கிட்டத்தட்ட 2 மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சையில் சங்கர் வயிற்றில் இருந்து  4 டூத் பிரஷ்  துண்டுகள்,  நாக்கை சுத்தம் செய்ய பயன்படும் பிளாஸ்டிக் குச்சிகள் 25, பேண்ட் ஜிப்-2 மற்றும் கிழிந்த துணிகளை அகற்றினார்கள். அவரின் உடல்நிலை முற்றிலும் தேறிய பின்னர் மனநல ஆலோசனைகள் வழங்கிய டாக்டர்கள் நேற்று சங்கரை அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். 

சங்கரின் அறுவை சிகிச்சை குறித்து டீன் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது,

இந்த அறுவை சிகிச்சையை நாங்கள் பெரிய சவாலாக ஏற்று வெற்றிகரமாக முடித்தோம். தற்போது சங்கர் நலமுடன் உள்ளார் என்று தெரிவித்தார்.