போக்குவரத்து நெரிசலால் சிக்கிக் கொண்ட இரயில்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…

0
36

 

போக்குவரத்து நெரிசலால் சிக்கிக் கொண்ட இரயில்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…

 

உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் போக்குவரத்து நெரிசல் காரணமாக சாலையில் நெரிசலில் சிக்கிய இரயில் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

நாம் அனைவரும் தற்போது சாலை, இரயில், விமானம் என்ற மூன்று விதமான போக்குவரத்துகளை பயன்படுத்தி வருகிறோம். இதில் விமானப் போக்குவரத்து சற்று பணம் அதிகம் உள்ள நபய்கள் அடிக்கடி பயன்படுத்துவார்கள்.

 

நாம் அனைவரும் சாலை மற்றும் இரயில் போக்குவரத்தை அடிக்கடி பயன்படுத்தி வருகிறோம். சாலை போக்குவரத்தை பயன்படுத்தும் பொழுது அதாவது கார், பைக், பேருந்து போன்ற வாகனங்களில் நாம் பயணம் செய்யும் பொழுது நாம் போக்குவரத்து நெரிசலை எதிர் கொள்வோம்.

 

சிலர் போக்குவரத்து நெரிசலுக்கு பயந்துவிட்டு இரயில் போக்குவரத்தை பயன்படுத்துவார்கள். ஆனால் தற்பொழுது இரயில் ஒன்று போக்காவரத்தா நெரிசல் காரணமாக நின்ற சம்பவம் உத்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

 

உத்திரப் பிரதேச மாநிலம் வாரணாசி இரயில்வே கிராசிங் அருகே ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் எந்தோ எக்ஸ்பிரஸ் இரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. நெரிசலில் சிக்கி நின்ற இரயில் ஹாரன் அடித்தபடி நின்று கொண்டிருந்தது. மேலும் போக்குவரத்து நெரிசலை விலக்க முடியாமல் இரயில்வே ஊழியர்கள் திணறினர்.

 

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பயணர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தடையின்றி ஓடும் இரயிலுக்கு கார், பைக், பேருந்து, லாரி போன்ற வாகனங்கள் நின்று பார்த்திருப்போம். ஆனால் போக்குவரத்து நெரிசலால் இரயில் நின்று இன்றுதான் பார்க்கிறோம்.