ஈரோடு மாவட்டத்தில் இரண்டு வயது  சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள் போலீசார் விசாரணை!

0
64
School student tragically died in Erode district! The people of the area are sad!
School student tragically died in Erode district! The people of the area are sad!

ஈரோடு மாவட்டத்தில் இரண்டு வயது  சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள் போலீசார் விசாரணை!

ஈரோடு மாவட்டம் பாரதி புரத்தை சேர்ந்தவர் பிரவீன் குமார் இவரது மனைவி நந்தினி பிரவீன்குமார் கட்டிட தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு யசித் (2) என்று ஒரு மகன் உள்ளார். வழக்கம்போல் வீட்டிற்கு முன் பக்கம் விளையாடிக் கொண்டிருந்தார். திடீரென மாயமானார். பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தில் தேடினார்கள்.

மேலும் எங்கேயும் தேடி  கிடைக்காத நிலையில் தீயணைப்பு துறையினர்க்கு தகவல் தெரிவித்தனர்.அந்த தகவலின்  பேரில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அருகில் உள்ள பெரும்பள்ளம் ஓடையில் 3 மணி நேரம் தேடலுக்கு பின்னர் சிறுவனை சடலமாக மீட்டனர்.

மேலும் இந்த சம்பவம்  குறித்து தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில்  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்  விளையாடிக் கொண்டிருந்த சிறுவனுக்கு ஏற்பட்ட இந்த  நிலையைக் கண்டு அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

author avatar
Parthipan K