ஈரோடு மாவட்டத்தில் செங்கல் சூலையில் தற்கொலை செய்த பெண்! காரணம் என்ன போலீசார் விசாரணை!

0
104
A woman committed suicide in a brick kiln in Erode district! The reason why the police investigation!
A woman committed suicide in a brick kiln in Erode district! The reason why the police investigation!

ஈரோடு மாவட்டத்தில் செங்கல் சூலையில் தற்கொலை செய்த பெண்! காரணம் என்ன போலீசார் விசாரணை!

மேற்கு வங்காள நடியா மாவட்டம் சோனகூர் பகுதியை சேர்ந்தவர் ஓபர்ணாசிங் (36). இவரின் முதல் கணவர்  திலிப் சிங் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இருந்து விட்டார். இவர்களுக்கு  மூன்று மகள்கள் உள்ளனர் அவர்கள்  மேற்கு வங்காளத்தில் வசித்து வருகின்றனர். மேலும் இதே போல் ஜெந்துசிங் (26) இவரின் மனைவி மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்  இவர்களுக்கு  மூன்று மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ஒபர்னாசிங்கும், ஜெந்துசிங்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக கணவன் மனைவியாக ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

மேலும் அதன் பிறகு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே புது மேட்டூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு ஒபர்னாசிங்கின் முதல் கணவரின் மகள்களுக்கு ரூ 15000 அனுப்ப பணம் வேண்டும் என ஜெந்துசிங்கிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் தற்போது பணம் இல்லை எனவும் கூறியுள்ளார். அதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்நிலையில்  ஒபர்னாசிங் இன்று அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் அதனை  பார்த்த ஜெந்துசிங் அதிர்ச்சி அடைந்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் அந்தியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில்  சம்பவ இடத்திற்கு  வந்த அந்தியூர் போலீசார் ஒபர்னாசிங்கின்  சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
Parthipan K