சேலத்தில் தற்கொலை முயற்சி செய்த இளம் பெண்! அதற்கு காரணம் கணவர் தானா போலீசார் விசாரணை?

0
96
A young woman who tried to commit suicide in Salem! Is the husband the reason for the police investigation?
A young woman who tried to commit suicide in Salem! Is the husband the reason for the police investigation?

சேலத்தில் தற்கொலை முயற்சி செய்த இளம் பெண்! அதற்கு காரணம் கணவர் தானா போலீசார் விசாரணை?

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள குமரகிரிபேட்டை  பகுதியை சேர்ந்தவர் சசிதரன் (34). இவருக்கும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கூட்டப்பள்ளி பகுதியை சேர்ந்த புவனா ஸ்ரீ (34) என்ற பெண்ணிற்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று வயதில் மகன் உள்ளார்.

மேலும் அவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். மேலும் சசிதரன் வீட்டில் இருந்தபடியே ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை கவியுகனை பள்ளிக்கு அனுப்புவதற்காக புவனஸ்ரீ தயார்படுத்திக் கொண்டிருந்தார்.

மேலும் கவியுகம் பள்ளிக்கு அனுப்புவதில் சிறிது தாமதம் ஆனதால் சசிதரனுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் ஆத்திரம் அடைந்த புவனேஸ்வரி அவரது அறைக்குள் சென்று சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். மேலும் அதனை பார்த்த சசிதரன் உடனடியாக புவனேஸ்வரி கீழே இறக்கி அம்மாபேட்டை கடலூர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேலும் அங்கு புவனாஸ்ரீ ஆபத்தான நிலையில்  தீவிர சிகிச்சை பெற்று வந்தார். மேலும் இது குறித்து அம்மா போட்டை போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு  வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

author avatar
Parthipan K