“யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள்…” பாலிவுட் நடிகர் அமீர்கான்

0
206

“யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள்…” பாலிவுட் நடிகர் அமீர்கான்

அமீர்கான் நடித்துள்ள லால் சிங் சத்தா திரைப்படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது.

தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் என்ற படத்தைத் தொடர்ந்து “அமீர்கான் லால் சிங் சத்தா” என்னும் படத்தில் நடித்துள்ளார் .இந்த படத்தை அத்வைத் சந்தன் என்னும் இயக்குனர் தான் இயக்கிருக்கிறார். அமீர்கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்கிறார், மேனா சிங் மற்றும் தமிழ் நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

இது 1994 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் டாம் ஹான்ங்ஸ் நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் பல விருதுகளை பெற்றுக் குவித்தன,மற்றும் “ஃபாரஸ்ட் கம்ப்” என்ற படத்தில் இது பெரிய அதிகாரபூர்வ தகவலுமாகும்.

கடந்த 3 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்த இந்த திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி பேன் இந்தியா ரிலீஸாக ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த ஆண்டு வரிசையாக முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் படங்களை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு அமீர்கான் இந்தியாவில் சகிப்பின்மை அதிகமாகியுள்ளது எனக் கூறியதற்காக இப்போது அவரின் படத்தை புறக்கணிக்கவேண்டும் என சமுகவலைதளங்களில் ஹேஷ்டேக்குகள் உருவாக்கப்படுகின்றன. இதற்கு பதிலளித்துள்ள அமீர்கான் “நான் யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள்.

என் படத்தை யாராவது பார்க்கவேண்டாம் என நினைத்தால் அவர்களை நான் புரிந்து கொள்கிறேன். இந்த படத்துக்காக நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம். பட ரிலீஸை எண்ணி நான் இரண்டு நாட்களாகவே தூங்கவே இல்லை. பட ரிலீஸுக்கு பிறகுதான் நான் தூங்குவேன் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.