தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அதிரடி உத்தரவு! அரசுக்கு கோடி கணக்கில் அபராதம்!

0
90
Action order of the National Green Tribunal! Millions of fines to the government!
Action order of the National Green Tribunal! Millions of fines to the government!

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அதிரடி உத்தரவு! அரசுக்கு கோடி கணக்கில் அபராதம்!

தற்போது தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்காணிப்பை தொடங்கியுள்ளது. அந்த வகையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் மற்றும் பிற சுற்றுச்சூழல் பிரச்சனைகளையும் கவனித்து வருகின்றது.அந்தவகையில் பஞ்சாப் அரசின் திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை தொடர்பான வழக்கை தீர்ப்பாயத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

கழிவு மேலாண்மை அந்த அரசின் தோல்வி காரணமாக கழிவு உற்பத்திக்கும் வெளியேற்றத்துக்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது.இதனை மாநிலத்தில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த விரிவான திட்டம் இல்லாததே இதற்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது.மேலும் இதனைதொடர்ந்து  தேசிய பசுமை தீர்ப்பாயம் பஞ்சாப் அரசுக்கு ரூ2,180 கோடி அபராதம் விதித்து தீர்பளித்தது.

இந்த தீர்ப்பையடுத்து பஞ்சாப் அரசு ரூ100 கோடி அபராதம் செலுத்தியுள்ளது.மீதமுள்ள ரூ 2,080 கோடியை இரண்டு மாதங்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான தேசிய பசுமை தீர்ப்பாய அறிவித்தது.

author avatar
Parthipan K