கணவருடன் சேர்ந்து கபடி விளையாடிய நடிகை ரோஜா.. வைரலாகும் வீடியோ.!!

0
122

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், பிரபு ஆகிய முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை ரோஜா.

தற்போது நடிகை ரோஜா ஆந்திராவில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நடிகை ரோஜா நகரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். நடிகை ரோஜா மீண்டும் தமிழில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறிவருகின்றனர்.

நடிகை ரோஜா தன்னை வைத்து அதிக படங்களை இயக்கிய இயக்குனர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

செல்வமணி-ரோஜா தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மேலும், அரசியலில் நுழைந்த பிறகு சினிமாவில் நடிக்காமல் திரையுலகில் இருந்து ஒதுங்கி இருக்கும் ரோஜா சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் நடிகை ரோஜா தற்போது ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். நகரி தொகுதியில் நடிகை ரோஜா அறக்கட்டளையை நடத்தி வருகிறார். கொரோனாவில் மன இறுக்கத்தில் உள்ள மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தும் வகையில் தனது அறக்கட்டளை சார்பில் கபடி போட்டியை நடத்தியுள்ளார்‌.

நகரி மேல்நிலைப்பள்ளியில் கபடி போட்டியை தொடங்கி வைத்த ரோஜா மாணவர்களுடன் கபடி விளையாடி உள்ளார். இந்த நிகழ்ச்சியில் நடிகை ரோஜாவும், அவரது கணவரும் திரைப்பட இயக்குனருமான ஆர்.கே‌.செல்வமணியும் கலந்து கொண்டார். ரோஜா ஒரு அணியிலும், அவரது கணவர் செல்வமணி ஒரு அணியிலும் இணைந்து கபடி விளையாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.