முன்னணி நடிகர்களே தயங்கிய நிலையில் நடிகர் சந்தானம் எடுத்த துணிச்சலான முடிவு

Photo of author

By Anand

முன்னணி நடிகர்களே தயங்கிய நிலையில் நடிகர் சந்தானம் எடுத்த துணிச்சலான முடிவு

Anand

Updated on:

முன்னணி நடிகர்களே தயங்கிய நிலையில் நடிகர் சந்தானம் எடுத்த துணிச்சலான முடிவு

பிரபலமான பல முன்னணி ஹீரோக்களே டபுள் ஆக்ட் படத்தில் நடிக்கத் தயங்கிக் கொண்டிருக்கும் போது ட்ரிபிள் ஆக்ட் படம் ஒன்றில் நடிக்கும் துணிச்சலான முடிவை எடுத்திருக்கிறார் சமீபத்தில் காதனையாகராக உருவெடுத்திருக்கும் நடிகர் சந்தானம். 

இந்நிலையில் கதாநாயகனாக அறிமுகமாகி ’தில்லுக்கு துட்டு 2’, ‘A1′ என தொடர்ந்து தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றிகளை நடிகர் சந்தானம் கொடுத்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சந்தானம் தனது நடிப்பு பயணத்தில் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்காக பிரபல நடிகர்களே தயங்கும் சூழ்நிலையில் இந்த துணிச்சலான முடிவை நடிகர் சந்தானம் எடுத்துள்ளார்.

நடிகர் சந்தானம் தன்னுடைய அடுத்தப் படத்திற்காக சயின்ஸ் பிக்‌ஷன் கதையோடு களம் இறங்கும் அவர் அப்படத்திற்காக மூன்று வேடங்களில் நடிக்கிறார் என்பது தான் கோலிவுட்டின் தற்போதைய ஹாட் டாப்பிக் என்கிறார்கள்.

இதுவரை சந்தானம் நடித்துள்ள படங்களில் காமெடியில் இது தான் உச்சம், என்று சொல்லும் அளவிற்கு இப்படம் உருவாக போகிறதாம். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷ் இப்படத்தை தயாரிக்கிறார். ‘அறம்’, ’குலேபகாவலி’, ’ஐரா’ போன்ற வெற்றிப் படங்களை தயாரித்திருக்கும் இவர், சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘ஹீரோ’, விஜய் சேதுபதி நடிப்பில் ‘க.பெ.ரணசிங்கம்’ ஆகிய படங்களையும் தற்போது தயாரித்து வருகிறார்.

மேலும்,நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்தை மிகப்பெரிய அளவில் வெளியிட்ட வரும் இவர் தான். இவரோடு சேர்ந்து சோல்ஜர் பேக்டரி கே.எஸ்.சினிஸும் இப்படத்தின் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறார். இவர், ஜெய்-அஞ்சலி நடிப்பில் வெளியான பலூன் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்படத்தின் தலைப்பு வரும் செப்டம்பர் 5 ஆம் தேதியன்று அறிவிக்கபட உள்ளது. இந்தப் படம் இவ்வளவு மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளான படமாக இருப்பதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்க இருக்கிறார் என்பது தான். மேலும் இது மட்டுமில்லாமல் இப்படத்தை இயக்க இருப்பவர் மிகப் பிரபலமான எழுத்தாளர் கார்த்திக் யோகி என்பதும் தான்.

கார்த்திக் யோகி தமிழ் சினிமாவில் பல வெற்றிகரமான திரைக்கதைகளுக்கு உதவியாக இருந்தவர். இப்படக்குழுவினர் இது மிக வித்தியாசமான கிரியேட்டிவான படமாக இருக்கும் என்கிறார்கள். இப்படத்தில் நிச்சயம் சந்தானத்தின் ட்ரிபிள் அவதாரம் வேற லெவலில் இருக்கும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். 

வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்கள் மட்டுமே நடிக்க முடிவெடித்திருக்கும் சந்தானம் ‘பிகில்’,’தர்பார்’ஆகிய இரு படங்களில் கெஸ்ட் ரோலில் நடிக்க அழைப்பு வந்த போது கூட கொஞ்சமும் யோசிக்காமல் நோ சொன்னது இண்டஸ்ட்ரி அறியாத ரகசியம் என்கிறார்கள்.

எது எப்படியோ நகைச்சுவை நடிகராக அறிமுகமான சந்தானம் தற்போது ஹீரோவாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் நல்ல இடத்திற்கு உயர்ந்து விட்டார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்