தனது முழு சம்பளத்தை ஆதரவற்றோர் இல்லத்திற்கு கொடுத்த சன்னி லியோன்! மனதை நெகிழ வைத்த சம்பவம்!!

0
75

தனது முழு சம்பளத்தை ஆதரவற்றோர் இல்லத்திற்கு கொடுத்த சன்னி லியோன்! மனதை நெகிழ வைத்த சம்பவம்!!

பிரபல இந்திய சினிமா நடிகை சன்னி லியோன் செய்த சமூக சேவை பொது மக்களிடம் பாராட்டை பெற்றுள்ளது.

நடிகை சன்னி லியோன் ஆரம்பகால சினிமாவில் ஆபாச படங்களில் நடித்து வந்தார். பின்னர் நல்ல கதையம்சமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் வடிவுடையான் இயக்கத்தில் வீரமாதேவி என்கிற வித்தியாசமான கதையில் நடித்து வந்தார். தவிர்க்க முடியாத சில காரணங்களால் அப்படம் பாதியிலேயே நின்றது.

இதனையடுத்து, தனது சொந்த வாழ்க்கை வரலாற்றை வைத்து உருவான “கரன்ஜித் கவுர் த அன்டோல்ட் ஸ்டோரி’ என்ற வெப்சீரிசில் நடித்து வந்தார். அதேபோல தற்போது ஒரு காமெடி வெப்சீரிசிலும் நடித்துள்ளார். அதைப்பற்றி சன்னிலியோன் கூறியதாவது:

காமெடியான விஷயங்கள் தனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும், மற்றவர் முகத்தில் புன்னகையை வரவழைப்பது எல்லோராலும் முடியாத காரியம் என்பதால் அனைவரையும் உற்சாகபடுத்த நடித்து வருவதாகவும் கூறினார்.

தற்போது நடித்து வரும் தொடரின் மூலம் கிடைத்த தனது முழு சம்பளத்தையும் மும்பையில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கி இருப்பதாகவும் கூறியுள்ளார். சினிமா மற்றும் விளம்பரங்களில் நடித்து பல கோடிகள் சம்பளம் வாங்கி பணத்தை குவித்தாலும், பிறருக்கு நன்மை செய்யும் மனம் வெகு சிலருக்கே உண்டு என்பதையும் இதுபோன்ற செயல்கள் நிரூபிக்கின்றன. ஆதரவற்றோர் இலத்திற்கு உதவிய நடிகை சன்னி லியோனுக்கு பாரட்டுகள் குவிந்து வருகிறது.

author avatar
Jayachandiran