சூர்யா இல்லை என்றால் நான் இல்லை- நடிகை ஜோதிகா பகிர்ந்த சினிமா அனுபவங்கள்

0
166
Kollywood's the best couple Surya-Jyothika

அஜித்-சிம்ரன் நடித்த ‘வாலி’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்த ஜோதிகா, இயக்குனர் வசந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யாவுடன் பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

முகவரி, ரிதம், குஷி, டும் டும் டும், தூள், பிரியமான தோழி, காக்க காக்க என டிரேட் மார்க் படங்களில் நடித்திருந்தார்.

நடிகர் சூர்யாவுடனான காதல் 2007 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்தோடு திருமணத்தில் முடிந்தது. இவர்களுக்கு தியா, தேவ் என்ற இரு குழந்தைகள் இருக்கின்றனர்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து முற்றிலும் ஒதுங்கி இருந்த ஜோதிகாவை அவரது கணவர் சூர்யா 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்தார். 2D என்னும் தனது சொந்த நிறுவனத்தில் மனைவி ஜோதிகாவை நடிக்க வைத்தார். மலையாள ரீமேக் திரைப்படமான 36 வயதினிலே மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.

அதன் பிறகு மகளிர்மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, செக்க சிவந்த வானம், ஜாக்பாட், ராட்சசி, தம்பி, போன் மகள் வந்தாள் திரைப்படங்களில் என கதாநாயகிக்கு முக்கியத்துவமான படங்களில் நடித்தார்.

தற்போது சரவணன் இயக்கத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, சூரியுடன் உடன்பிறப்பே என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் சசிகுமார் ஜோதிகாவுக்கு அண்ணனாகவும், சமுத்திரக்கனி கணவராகவும் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் அக்டோபர் 14ஆம் தேதி OTT ல் வெளியாகிறது.

சமீபத்திய பேட்டி ஒன்றில், ஜோதிகா தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில் தனது சினிமா பயணம் மிகவும் ஆழகானது என்று கூறியுள்ளார். இந்த நேரத்தில் இயக்குனர் ப்ரியதர்ஷன் மற்றும் வசந்த்திற்கு தான் நன்றி கூர் வேண்டும் என்று கூறியுள்ளார்.

தன் கணவர் சூர்யா இல்லை என்றால் நான் ஒன்றுமே இல்லை எனக் கூறினார். மேலும் அவருடைய திரைப்பயணத்தில் இரண்டாவது இன்னிங்ஸ் மிகவும் முக்கியமானது ,

இரண்டாவது இன்னிங்சில் கடந்த 8 வருடங்களாக அர்த்தம் உள்ள படங்களில் நடித்தேன். பெண்களும், குடும்பத்தினரும் பெருமைப்படும்படியான படங்களில் மட்டுமே நடிக்க விரும்புகிறேன். அதுமாதிரி படங்களைத்தான் ஒப்புக்கொள்கிறேன்.

என்னுடைய 50-வது படமான உடன்பிறப்பே மிகவும் முக்கியமானது. நான் இதுவரை நடித்த படங்களில் நிறைய பேசி இருக்கிறேன். ஆனால் பெண்களுடைய நிஜமான வலியை இந்த படத்தில்தான் பிரதிபலித்து இருக்கிறேன். 90 சதவீதம் அமைதியாகவும், வலிமையுடனும் இருக்கிறார்கள். இதுவரை நடித்த படங்களில் இது வலிமையான கதாபாத்திரம்” என்றார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

author avatar
Parthipan K