சிறப்பாக பந்துவீசிய ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள்! 242 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்த இலங்கை!!

0
35
#image_title

சிறப்பாக பந்துவீசிய ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள்! 242 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்த இலங்கை!!

இன்று(அக்டோபர்30) நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் ஆப்கானிஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சால் இலங்கை அணி 241 ரன்கள் சேர்த்துள்ளது.

இன்று(அக்டோபர்30) நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான லீக் சுற்றில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இலங்கை அணி பேட்டிங் செய்வதற்கு களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக கருணரத்னே மற்றும் நிசன்கா இருவரும் களமிறங்கினர். இதில் கருணரத்னே 15 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளிக்க தொடர்ந்து விளையாடிய மற்றொரு தொடங்கிய வீரர் நிசன்கா 46 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

அதன் பின்னர் களமிறங்கிய காசில் மென்டிஸ் 39 ரன்களுக்கும் சமரவிக்ரமா 36 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இலங்கை அணியில் சரியான பார்டனர்ஷிப் அமையாத காரணத்தால் இலங்கை அணி 49.3 ஓவர்களில் பத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் சேர்த்தது.

ஆப்கானிஸ்தான் அணியில் சிறப்பாக பந்து வீசிய ஃபசல்ஹக் பரூகி 10 ஓவர்கள் வீசி 34 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முஜீப் உர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் ரஷித் கான், அஸ்மத்துல்லா ஒமர்சாய் இருவரும் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். தற்பொழுது ஆப்கானிஸ்தான் அணி 242 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடி வருகின்றது.