விவாகரத்துக்குப் பிறகு அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகும் நடிகை சமந்தா.!!

0
163

எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் சமந்தா இரு மொழிகளில் நடிக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் காத்துவாக்குல இரண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவர் பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர் சமீபத்தில் விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார். இவருடைய விவாகரத்துக்கு பல்வேறு வதந்திகள் வெளிவந்த நிலையில், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என சமந்தா கடந்த வாரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இருந்தபோதிலும், விவாகரத்துக்கு சமந்தா தான் காரணம் என்றும் அவர் வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்தார். என்றும் குழந்தை பெற்றுக் கொள்வதை விரும்பவில்லை என்றும் அவர் மீது சமூக வலைதளங்களில் அவதூறுகள் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இது போன்ற எதிர்மறையான சூழலிலிருந்து விலககும் விதமாக சமந்தா திரைப்படங்களில் மறுபடியும் நடிக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்தவகையில் தற்போது நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படத்தின் அறிவிப்பை எஸ்ஆர் பிரபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Previous articleஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்.? சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங்.!!
Next article#Breaking IPL 2021: ருத்ராஜ் 32 ரன்னில் அவுட்