நிலக்கரி இறக்குமதி மோசடி குற்றச்சாட்டில் கைதான அகமது ஏ.ஆர். புகாரியின் ஜாமீன்!! மனுவை தள்ளுபடி செய்ய சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!!

0
218
#image_title

நிலக்கரி இறக்குமதி மோசடி குற்றச்சாட்டில் கைதான அகமது ஏ.ஆர். புகாரியின் ஜாமீன்!! மனுவை தள்ளுபடி செய்ய சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!!

நிலக்கரி இறக்குமதி செய்த விவகாரத்தில் 564.48 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, நிலக்கரி இறக்குமதி நிறுவனமான கோஸ்டல் எனர்ஜி மற்றும் அதன் இயக்குநரான அகமது ஏ.ஆர். புகாரி ஆகியோர் மீது கடந்த 2018ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த மோசடி மூலம் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை அகமது புகாரி, சட்டவிரோதமாக தனது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுப்பி , மீண்டும் இந்திய நிறுவனங்களுக்கு பரிமாற்றம் செய்ததாக கடந்த 2020-ம் ஆண்டு சட்ட விரோத பண பரிமாற்றசட்டத்தின் கீழ் அகமது புகாரியை கைது செய்து சிறையிலடைத்தனர்.

இந்நிலையில் அவர், ஜாமீன் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஏ.கே.மெகபூப் அலிகான் விசாரணைக்கு வந்தபோது, அகமது புகாரி தரப்பில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டதாகவும், ஒராண்டு ஆகியும் விசாரணை முடியாததால் சட்டப்பூர்வ ஜாமீன் வழங்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் அமலாக்கத்துறை தரப்பில், அகமது புகாரி மீதான விசாரணை முடிந்துவிட்டாலும், அவருடன் தொடர்புடைய பொதுத்துறை நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் குறித்தும், அயல்நாட்டில் செய்யப்பட்ட முதலீடுகள் குறித்தும் விசாரணை நடந்து வருவதால் சட்டப்பூர்வ ஜாமீன் வழங்க அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அகமது புகாரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

author avatar
Savitha