செப்டம்பர் 4ம் தேதி நடைபெறும் அதிமுக ஆலோசனை கூட்டம்.. திடீரென்று தேதியை மாற்றிய கட்சி மேலிடம் !!

0
66

செப்டம்பர் 4ம் தேதி நடைபெறும் அதிமுக ஆலோசனை கூட்டம்… திடீரென்று தேதியை மாற்றிய கட்சி மேலிடம்…

வருகிற செப்டம்பர் மாதம் 4ம் தேதி அதாவது நாளை அதிமுக கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக இருந்த.நிலையால் தற்பொழுது ஆலோசனைக் கூட்டத்திற்கான தேதியை அதிமுக கட்சி மாற்றியுள்ளதாக தகவல் வெளிய்கியுள்ளது.

அண்மையில் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் அதிமுக கட்சியின் ‘பொன்விழா எழுச்சி மாநாடு’ மதுரையில் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்த பிறகு அதிமுக கட்சியின் ஆலோசனைக் கூட்டம் செப்டம்பர் 4ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் தற்பொழுது அதிமுக கட்சியின்.ஆலோசனைக் கூட்டத்தின் தேதியை 4ம் தேதியில் இருந்து செப்டம்பர் 10ம் தேதிக்கு மாற்றப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக அதிமுக கட்சி வெளியிட்ட அறிக்கையில் “முன்னேற்றக் கழகப் அனைத்திந்திய அண்ணா திராவிட பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகின்ற 4.9.2023 – திங்கட் கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறுவதாக இருந்த ஆலோசனைக் கூட்டம், தேதி மாற்றப்பட்டு 10.9.2023 – ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10 மணிக்கு நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

10.9.2023 அன்று நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டுக் குழுவினர்கள் ஆகிய அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அதிமுக கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணாமலையின் பாதயாத்திரை, கொடநாடு விவகாரம், எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி அகியவை குறித்து விவாதம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.