செப்டம்பர் 4ம் தேதி அதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்.. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவிப்பு!!

0
46

செப்டம்பர் 4ம் தேதி அதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்… அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவிப்பு…

அதிமுக கட்சியின் மாவட்ட செயலர்கள் கூட்டம் வரும் செப்டம்பர் மாதம் 4ம் தேதி அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகமான அதிமுக கட்சியானது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 4ம் தேதி அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில் அதிமுக கழக செயலர்கள், மாவட்ட செயலர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது என்று அதிமுக கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தலைமைக் கழக அறிவிப்பு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகின்ற 4.9.2023 – திங்கட் கிழமை காலை 9.30 மணிக்கு, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மதுரையில் 20.8.2023 அன்று நடைபெற்ற கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை சிறப்புடன் நடத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த பல்வேறு மாநாட்டுக் குழுவினர்கள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மேற்கண்ட பொறுப்புகளில் இருக்கும் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.