அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை! நெருப்போடு விளையாட வேண்டாம்!

0
119
#image_title
அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை! நெருப்போடு விளையாட வேண்டாம்! 
தமிழகம் முழுவதும் இன்று சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267-வது பிறந்தநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் இன்று நடைபெற்ற விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தீரன் சின்னமலை திருவுருவ படத்திற்கு மலர் தூவி மாலையிட்டு மரியாதை செலுத்தினர்.
இதன் பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக என்பது ஒரு ஊழல் கட்சி அவர்கள் குடும்பம் மட்டுமே வளர வேண்டும் என்று நினைத்த நிலையில் அதிமுக என்ற இயக்கம் உருவானது. திமுகவின் சொத்து பட்டியலை அண்ணாமலை தற்பொழுது வெளியிட்டுள்ள நிலையில் வெளியிட்டது மட்டுமல்லாமல் அந்த பணத்தை பறிமுதல் செய்து பொதுமக்களின் கஷ்டங்களை தீர்க்கலாம். பல நல்ல திட்டங்களை தொடங்கலாம்.
அண்ணாமலை இன்று தான் சொல்கிறார் திமுக ஊழல் கட்சி என்று. ஆனால் நாங்கள் வாழ்நாள் முழுவதும் திமுக ஊழல் கட்சி என்று சொல்லிக் கொண்டு வருகிறோம். அதிமுகவில் அனைவரின் சொத்து விவரங்களையும் தெளிந்த நீரோடை போல தேர்தல் ஆணையத்தில் கொடுத்து இருக்கிறோம். ஊழல் சொத்துக்கள் இருந்தால் பறிமுதல் செய்து கொள்ளுங்கள். மடியிலே கனமில்லாத போது வழியில் பயம் எதற்கு தைரியமாக சொல்கிறேன். எது வேண்டுமானாலும் பண்ணுங்கள் நாங்கள் அதை எதிர் கொள்வோம் என்றார்.
தேவையில்லாமல் எங்களை யாரும் டச் பண்ண வேண்டாம், அது நெருப்போடு விளையாடுவது போன்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் அதிமுக தொடர்கிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவும் அங்கம் வகிக்கிறது. கூட்டணிக் குறித்து அண்ணாமலை முடிவு செய்ய முடியாது. மத்திய குழுத் தான் முடிவுச் செய்யும் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
author avatar
Savitha