சென்னைக்கு  மீண்டும் இந்த நாட்டில் இருந்து விமான சேவை தொடக்கம்! மகிழ்ச்சியில் பயணிகள்!

Photo of author

By Parthipan K

சென்னைக்கு  மீண்டும் இந்த நாட்டில் இருந்து விமான சேவை தொடக்கம்! மகிழ்ச்சியில் பயணிகள்!

Parthipan K

Air service to Chennai again from this country! Happy travelers!

சென்னைக்கு  மீண்டும் இந்த நாட்டில் இருந்து விமான சேவை தொடக்கம்! மகிழ்ச்சியில் பயணிகள்!

இலங்கை அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலைக்குத்தள்ளப்பட்டனர்.அதனால் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டது.அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு வரும் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டது.

மேலும் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் இலங்கை.அதில் இருந்து மீள்வதற்காக இந்த விமான சேவை மூலம் சுற்றுலா வருவாய் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர்.அதுமட்டுமின்றி சுற்றுலாத் துறை இலங்கைக்கு அதிகளவு வருவாய் ஈட்டித் தரும் பிரிவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அந்நாட்டில் சுற்றுலாத் துறை மேம்பட்டு வருகின்றது.

அதனால் விமான சேவையை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்.அதனால் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஸ்ரீபால் டி சில்வா நாடாளுமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை கூறுகையில் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னை இடையே விமான சேவை விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்தார்.மேலும் இந்த சேவையானது வரும் டிசம்பர் 12 ஆம் தேதி இந்த விமான சேவை தொடங்க அதிக வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகின்றது.இதற்காக விமான நிலைய ஓடுபாதைகள் அனைத்தையும் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது என தெரிவித்துள்ளனர்.