அடம்பிடித்து அப்பாவின் கால்ஷீட் வாங்கிய ஐஸ்வர்யா … ரஜினியின் அடுத்த பட அப்டேட்!

0
116

அடம்பிடித்து அப்பாவின் கால்ஷீட் வாங்கிய ஐஸ்வர்யா … ரஜினியின் அடுத்த பட அப்டேட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தொடர் தோல்விகளால் அடுத்து வெற்றியைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ரஜினி இளம் இயக்குனர்களை தேர்வு செய்து அவர்களின் இயக்கத்தில் நடித்து வருகிறார். அந்தவகையில் இப்போது அவர் தன்னுடைய 169 ஆவது படமாக நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான தயாரிக்கிறது. அண்ணாத்த படத்தின் தோல்வியால் இந்த படத்துக்கு ரஜினிக்கு சம்பளம் கணிசமாகக் குறைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நீண்ட நாட்களாக ரஜினியை இயக்க வேண்டும் என்ற ஆசையோடு இருக்கிறார் அவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இந்நிலையில் இப்போது லைகா தயாரிப்பில் அவர் இயக்க உள்ள படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்க ரஜினி சம்மதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. முதலில் நடிக்க தயங்கிய ரஜினிகாந்த் மகளின் வற்புறுத்தலால் அந்த படத்தில் நடிக்க சம்மதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.

இதற்கிடையில் ஜெயிலர் திரைப்படத்துக்குப் பிறகு ரஜினி அடுத்து சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில் திரைக்கதை உருவாக்கத்தில் எஸ் எஸ் ராஜமௌலியின் தந்தையும் பிரபல கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத் பணியாற்றுவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜமௌலியின் அனைத்து படங்களுக்கும் விஜயேந்திர பிரசாத்தான் கதையாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.