தனது மகளின் நடிப்பை பார்த்து புல்லரித்துப் போன ஐஸ்வர்யா ராய்!

0
297
#image_title

பிரபல நடிகர் நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா பச்சன். அவர் தனது பள்ளியின் பல மாணவர்களுடன் சேர்ந்து தனது பள்ளியின் ஆண்டு தின விழாவில் இசை நாடகத்தில் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் படிக்கும் அவர்களது குழந்தைகள் கலந்து கொண்டனர்.

இந்த நாடகத்தில் ஐஸ்வர்யாவின் மகள் ஆராத்யா பச்சன் அவர்களுக்கு ஒரு நெகட்டிவ்வான ரோல் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த ரோலில் மிகவும் நேர்த்தியாக இங்கிலீஷ் வார்த்தைகளை பயன்படுத்தி நல்ல ஆங்கில நேர்த்தியில் தனது டயலாக் டெலிவரிகளை கொடுத்துள்ளார். 12 வயது பையனும் கால்களை ஆட்டி ரசிக்கும் வண்ணம் இந்த நாடகம் கலந்த இசை நிகழ்ச்சி நடந்துள்ளது.

இதை ஐஸ்வர்யா ராயும், ஐஸ்வர்யா ராயின் அம்மாவும் பார்த்த மிகவும் ரசித்துள்ளனர். ரசித்தது மட்டும் இன்றி தனது ஃபோனில் வீடியோவை எடுத்து பார்த்து அந்த நாடகம் முழுவதும் ரசித்து உள்ளனர்.

இந்த வீடியோ இணையதளத்தில் கலக்கிக் கொண்டுள்ளது. அனைவரும் ஆராத்யா பச்சன் நடிப்பில் மூழ்கி கமெண்ட்களை அள்ளித் தெளித்து வருகின்றன. “ஐஸ்வர்யா ராயின் மகள் என்றால் சும்மாவா!’ இவ்வளவு அழகாக நடித்து இருக்கிறார்.

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா ! என்ற கமெண்டுகள் அதிகமாக வந்துகொண்டிருக்கின்றன. தனது அம்மா அப்பாவின் பேரை தனது திறமையான நடிப்பால் காப்பாற்றியுள்ளார் என்றே சொல்லலாம்.

author avatar
Kowsalya