தேமுதிக கட்சியின் புதிய பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிரமேலதா விஜயகாந்த்! நன்றி தெரிவித்து அறிக்கை வெளியீடு!!

0
213
#image_title

தேமுதிக கட்சியின் புதிய பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிரமேலதா விஜயகாந்த்! நன்றி தெரிவித்து அறிக்கை வெளியீடு!!

தேமுதிக கட்சியின் புதிய பொதுச் சொயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தேமுதிக கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் அதாவது கடந்த டிசம்பர் 14ம் தேதி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், விஜய் பிராபகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். இதையடுத்து இந்த கூட்டத்தில் விஜயகாந்த் அவர்களின் முன்னிலையில் தேமுதிக கட்சியின் புதிய பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து தேமுதிக கட்சியின் புதிய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிரமேலதா விஜயகாந்த் அவர்களுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், எதிர்கட்சித் தலைவர்எடப்பாடி கே.பழனிசாமி, பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்நிலையில் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் கேப்டன் அவர்கள் பொதுச்செயலாளராக என்னை தேர்வு செய்தற்கு வாழ்த்து தெரிவித்த அதிமுக கழகப் பொதுச்செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் திரு.எடப்பாடி.K.பழனிச்சாமி அவர்களுக்கும், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் திரு.அண்ணாமலை அவர்களுக்கும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணன் திரு.ஒ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், மதிப்புக்குரிய திருமதி.சசிகலா அவர்களுக்கும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.ஜி.கே.வாசன்,MP., அவர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் திரு.அன்புமணி ராமதாஸ், புதிய நீதிக் கட்சியின் தலைவர் திரு.ஏ.சி.சண்முகம் அவர்களுக்கும், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் திரு.ஜெயக்குமார் அவர்களுக்கும், திரு.விஜயபாஸ்கர் அவர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் திரு.G.K.மணி, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் திரு.கருணாஸ் மற்றும் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் எனக்கு தொலைபேசி மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும், நேரிலும் வாழ்த்துக்களை தெரிவித்த கழக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டாள்ளார்.