துணிவு படத்தில் அஜித்துக்கு இன்னும் சம்பள பாக்கி உள்ளதா? வெளியான தகவல்!

0
111

துணிவு படத்தில் அஜித்துக்கு இன்னும் சம்பள பாக்கி உள்ளதா? வெளியான தகவல்!

துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிந்து இப்போது டப்பிங் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

அஜித் நடித்துவரும் துணிவு திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இந்த படத்தின் டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அஜித் இன்னும் டப்பிங் பேசவில்லை என்றும் அவர் தற்போது அவர் வாரணாசியில் சுற்றுலா சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அஜித் டப்பிங் பேசாமல் சென்றதற்கு காரணமாக அவருக்கு இன்னும் சம்பள பாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போனி கபூர் அந்த படத்தைக் கொடுத்த பின்னர்தான் அஜித் டப்பிங் பேசுவார் என்றும் சொல்லப்படுகிறது.

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள துணிவு படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த மூன்று படங்களில் நடிக்கவும் அஜித்துக்கு மொத்தமாக சம்பளம் பேசப்பட்டுள்ளது. அதில் ஒரு மிகப்பெரிய தொகையை போனி கபூர் அஜித்துக்கு தரவேண்டி உள்ளதாக இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

துணிவு திரைப்படம் தமிழ்நாட்டில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தால் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. அதே போல ரிலீஸுக்கு பிந்தைய ஓடிடி ரிலீஸை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஜனவரி 12 ஆம் தேதி வியாழக் கிழமை இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று சொல்லப்படுகிறது.