சகல நன்மைகளும் கிடைக்கும்.. இவ்வாறு செய்தால்!

0
207
#image_title

சகல நன்மைகளும் கிடைக்கும்.. இவ்வாறு செய்தால்!

*பசு மாடுகளுக்கு வாழைப்பழம் வாங்கி சாப்பிட கொடுத்தால் பண வரவு அதிகரிக்கும்.

*துளசி மாடத்திற்கு விளக்கேற்றி 3 முறை அதை சுற்றி வந்தால் சகல யோகம் கிடைக்கும்.

*உப்பு, அரிசி இந்த இரண்டு பொருட்களும் செல்வத்தை வாரி வழங்கக் கூடியவை. இதை இரண்டையும் தரையில் சிந்தக் கூடாது.

*கிழிந்த துணிகளை உடுத்தக் கூடாது. இதனால் வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். இதனால் வீட்டில் பணக் கஷ்டம் அதிகரிக்கும்.

*அம்மிக்கல், உரலில் உட்காருவது, அதன் மீது கால் வைப்பது போன்றவற்றை ஒருபோதும் செய்யக் கூடாது.

*வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுப்பதால் பல ஜென்ம பாவங்கள் நீங்கும்.

*சாப்பாடு, உப்பு, நெய் ஆகிய பொருட்களை கைகளால் பரிமாறக் கூடாது. கரண்டி வைத்து தான் பரிமாற வேண்டும்.

*அமாவாசை அன்று எண்ணெய் குளியல் கூடாது.

*பெண்கள் வளையல் அணியாமல் பிறருக்கு அன்னம் பரிமாறக் கூடாது.

*காலை எழுந்தவுடன் தங்கள் உள்ளங்கை, உங்கள் முகம், கடவுள் படம் ஆகியவற்றை பார்ப்பது நல்லது.