Breaking News

அகில இந்தியாவைக் கலக்கிய புஷ்பா… இரண்டாம் பாகத்தின் பூஜை இன்று

அகில இந்தியாவைக் கலக்கிய புஷ்பா… இரண்டாம் பாகத்தின் பூஜை இன்று

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கிய புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்தது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிய படம் புஷ்பா. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வந்த இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. முதல் பாகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகி பேன் இந்தியா ஹிட்டானது. இதையடுத்து பாகுபலி படம் போல இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகமாகியுள்ளது.

முதல் பாகம் வெளியாகி கிட்டத்தட்ட 10 மாதங்கள் ஆகியும் இரண்டாம் பாகம் தொடங்கப்படவில்லை. முதல் பாகத்தின் எதிர்பாராத வெற்றியால் இரண்டாம் பாகத்தில் பல மாற்றங்களை இயக்குனர் சுகுமார் செய்து வருவதாக சொல்லப்பட்டது. அதையடுத்து படத்தின் கதையை சர்வதேச நாடுகளில் நடப்பது போல மாற்றியுள்ளனர் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் புஷ்பா தி ரூல் படத்தின் பூஜை இன்று தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இது புஷ்பா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான ஒன்றாக அமைந்துள்ளது. ஏற்கனவே இரண்டாம் பாகத்துக்கான சில காட்சிகளை படமாக்கி விட்டதாக படக்குழு தெரிவித்துள்ள நிலையில் எஞ்சியுள்ள காட்சிகளை விரைவில் படமாக்கி அடுத்த ஆண்டில் படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் பாகத்தில் இந்த படத்தில் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அவர் காவல்துறை அதிகாரியாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Leave a Comment