ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று ஜம்மு காஷ்மீரில் இருக்கக்கூடிய பஹல் காம் பகுதிகளில் இருக்கக்கூடிய ரெசார்ட் ஒன்றில் சுற்றுலா பயணிகள் தங்கியிருந்த நேரத்தில் அங்கு திடீரென துப்பாக்கியுடன் வந்த தீவிரவாதிகளும் சட்டத்தில் 26 பேர் உயிரிழந்ததோடு 18 பேர் காயம் அடைந்தனர். குறிப்பாக ஆண்களை குறி வைத்த லதாகுதல் நடத்தப்பட்டது என்று சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
தீவிரவாதிகள் இஸ்லாமியர் அல்லாதவர்களை மட்டுமே சுட்டுக் கொன்றதாகவும் தெரிவித்திருக்கக்கூடிய நிலையில் இந்த பயங்கரவாத தாக்குதலால் உலகமே அதிர்ந்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் திரை பிரபலங்கள் பலரும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அப்படியாக பாலிவுட் நடிகர் அமிதாபச்சன் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றினை போட்டு இருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பை பெற்று வருகிறது.
அமிதா பச்சனின் X தள பதிவு :-
எப்பொழுதும் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் சர்ச்சையான கருத்துக்களை மட்டுமே பதிவிடக்கூடியவராக பார்க்கப்படுபவர் அமிதாப்பச்சன். அதேபோன்ற ஒரு சர்ச்சை தான் மீண்டும் இவர் செய்திருக்கிறார். அதாவது தீவிரவாத தாக்கத்தால் நடந்த அடுத்த சில மணி நேரங்களில் இவர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு இருக்கக்கூடிய பதிவில் ” பதிவு 5356 ” என்று மட்டும் குறிப்பிட்டு வேறு எதுவும் நடந்த நிகழ்வு பற்றி குறிப்பிடாமல் விட்டுவிட்டார். எவ்வளவு பெரிய துயரமான நிகழ்வு நடந்திருக்கிறது என்றும் இவர் அதற்கு இரங்கல் தெரிவிக்காமல் விளையாடிக் கொண்டிருப்பதாகவும் ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். இவர் இவ்வாறு ஒரு புறம் விளையாடிக் கொண்டிருக்க மறுபுறம் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஜான்வி கபூர் சஞ்சய் தத் சோனு சூட் உள்ளிட்ட பலர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தங்களுடைய இரங்கல்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.