அம்மாடி…. இப்படி ஒரு Loveவா… சூர்யாவை கண்டித்த சிவக்குமார்… ஜோதிகா என்ன செய்தார்ன்னு தெரியுமா?

0
82
#image_title

அம்மாடி…. இப்படி ஒரு Loveவா… சூர்யாவை கண்டித்த சிவக்குமார்… ஜோதிகா என்ன செய்தார்ன்னு தெரியுமா?

எந்த ஒரு முன் அனுபவம் இல்லாமல் தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். பிரபல நடிகர் சிவகுமாரின் மகனும், ‘பருத்திவீரன்’ புகழ் கார்த்தியின் அண்ணனுமாவார். தமிழ் திரையுலகத்தில் ‘நேருக்கு நேர்’ படத்தில் முதல்முறையாக அவர் ஹீரோவா நடித்தார். குறுகிய காலக்கட்டத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக மாறினார்.

அன்று முதல் இன்று வரை முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். 3 முறை ‘தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருது’, 3 முறை ‘ஃபிலிம்ஃபேர் விருது’, 4 முறை ‘விஜய் விருது’ என பல விருதுகளை வென்றுள்ளார்.

அதேபோல் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் ரஜினி, கமல், அஜித், விஜய், பிரசாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து நட்சத்திர நடிகையாக திகழ்ந்தார். தமிழில் ‘வாலி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஜோதிகா. இதனையடுத்து, நடிகர் சூர்யாவுடன் இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்தார். இப்படத்திலிருந்து தான் சூர்யாவிற்கும், ஜோதிகாவிற்கும் காதல் பூத்தது. கிட்டத்தட்ட 7 தமிழ் படங்களில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்தனர்.

முதலில் சமூகவலைத்தளங்களில் இவர்களுடைய காதல் கிசுகிசுக்கப்பட்டபோது, இருவரும் அதை மறுத்தனர். இவர்களுடைய திருமணத்திற்கு முதலில் சூர்யாவின் தந்தை சிவக்குமார் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால், சூர்யாவை திருமணம் செய்து கொள்ள ஜோதிகா 4 வருடங்களாக காத்துக்கொண்டிருந்தார்.

நடிகர் சூர்யாவின் தங்கை பிருந்தா திருமணத்திற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வந்த சமயத்தில், சூர்யாவிடம் திருமணம் குறித்து அவர் விசாரித்தார். அப்போது, சூர்யா ஜோதிகாவை காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, இவர்களின் திருமணத்திற்கு சிவக்குமார் ஒப்புக்கொள்ள கடந்த 2006ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு தியா,தேவ் என்ற 2 பிள்ளைகள் உள்ளனர். சமீபத்தில் இவர்கள் இருவரும் தங்களது 17வது திருமண நாளை சிறப்பாக கொண்டாடினர்.

இவர்கள் இருவரை போல் திருமண வாழ்க்கையில் இருக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து சமூகவலைத்தளங்களில் கமெண்ட் செய்தனர்.

author avatar
Gayathri