நேர்மையான அதிகாரி அண்ணாமலை!!  சீமான் கிண்டல்!!

0
222
An honest officer deserves Annamalai!! Seaman teased that!!
An honest officer deserves Annamalai!! Seaman teased that!!

நேர்மையான அதிகாரி அண்ணாமலை!!  சீமான் கிண்டல்!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விருதுநகர் சென்றார். அங்கு தியாகி சங்கரலிங்கனார் மண்டபத்திற்கு சென்று  அவருடைய சிலைக்கு மாலை அணிந்து மரியாதை செய்தார்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த சீமான் பத்திரிக்கையாளர்கள் கேட்ட பல கேள்விக்கு பதில் அளித்தார். அதில் அவர் தளபதி விஜய் அவர்கள்  ஓட்டிற்கு  பணம் வாங்ககூடாது என்று கூறியதை நான் வரவேற்பதாகவும்  கூறினார்.

பின்னர் பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து பேசினார். அதில்,அவர் அண்ணாமலை  இப்பொழுது எல்லாம் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கிறார் என்றும் ஏனென்றால் அவர் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் நேர்மையான அதிகாரி என்றார். அதனால்   ஊழலுக்கு எதிராக பேசுவதற்கான தகுதி இவருக்கு மட்டும் தான்  உள்ளது என்று நகைக்கும் படி கூறினார்.

இப்படியெல்லாம் பேசினால் மட்டும் பாஜக தமிழ் நாட்டில் வளர்த்து விடாது என்றார் சீமான். முதலில் அண்ணாமலை திமுக ஊழல் செய்வதாக கூறியிருந்த நிலையில் பின்பு அதற்கான ஆதாரம் ஒன்றையும் வெளியிட்டார். அது திமுகவில் உள்ள தலைவர்களின் சொத்து பட்டியல் ஆகும். இந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியது.

அதனையடுத்து ஒரு ஆடியோ ஒன்றை வெளியிட்டார் அதில் சபரீசன்  மற்றும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 30 ஆயிரம் கோடி சொத்து சேர்த்துவிட்டார்கள் என்று கூறப்படுகிறது.

இப்பொழுது அண்ணாமலை அதிமுகவை ஊழல் கட்சி என்று கூறி வருகின்றார். முதலமைச்சர் ஜெயலலிதா ஊழல் செய்ததன் காரணமாக தான் தமிழகம் இன்று ஊழல் மாநிலமாக மாறியுள்ளது என்று அவர் பேசியதற்கு அதிமுக-வினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

author avatar
Parthipan K