Breaking News

தூத்துக்குடி அருகே கிராம நிர்வாக கொலை வழக்கு தொடர்பாக விசாரணை!

தூத்துக்குடி அருகே கிராம நிர்வாக கொலை வழக்கு தொடர்பாக விசாரணை அதிகாரியாக சுரேஸ் டி.எஸ்.பி. நியமனம் செய்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பான கோப்புகள் அனைத்தையும் ஏற்கனவே விசாரணை நடத்தில் முறப்பநாடு காவல் ஆய்வாளரிடமிருந்து பெற்றுகொண்டு விசாரணையை தொடங்கி உள்ளதாக கூறினார்.

மேலும் கொலை சம்பவம் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலம் மற்றும் மணல் திருட்டு நடைபெறுவதாக எழுந்துள்ள புகார் தொடர்பான இடம் ஆகியவைகளை நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்த இருப்பதாக விசாரணை அதிகாரி சுரேஷ் டி.எஸ்.பி தகவல் தெரிவித்துள்ளார்.