பள்ளி திறப்பு தேதியை அறிவித்த ஆந்திரா – தமிழகமும் இதை பின்பற்றுமா?

Photo of author

By Parthipan K

பள்ளி திறப்பு தேதியை அறிவித்த ஆந்திரா – தமிழகமும் இதை பின்பற்றுமா?

Parthipan K

Updated on:

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை தேர்வின்றி அனைவரும் தேர்ச்சிபெற்றதாக பெரும்பாலான மாநில அரசுகள் அறிவித்தன.

தமிழகத்தை போலவே அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்திலும் இன்னும் பத்தாம் வகுப்புக்கான பொது தேர்வு இன்னும் நடத்தப்படவில்லை.

இந்நிலையில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 3ம் முதல் பள்ளிகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் ஜெகநாதன் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஜூலை மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். பள்ளிகளை புனரமைப்பதற்கான ரூ.456 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிகள் நவீனமயமாக்கப்படும் என்றும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவை தொடர்ந்து தமிழக அரசும் பள்ளி மீண்டும் எப்போது திறப்பது என்பது குறித்து ஆலோசித்து வருகிறது.