அங்கன்வாடி நிலையத்தின் நேரம் மாற்றம்!! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0
134

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அங்கன்வாடி மையங்களில் நேரம் மற்றும் தற்காலிக தொகுப்பு புதிய ஆசிரியர்களின் கோரிக்கைகள் போன்றவற்றிற்கான சில முக்கிய நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது.

 

இதுகுறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :-

 

202203-ஆம் கல்வியாண்டில் இருந்து அரசினுடைய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் செயல்பட்டு வரக்கூடிய 2381 அங்கன்வாடி மையங்களில் LKG & UKG போன்ற வகுப்புகளை தொடர்ந்து நடத்த தமிழக அரசால் அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது . மேலும் இந்த வகுப்புகளை நடத்தக்கூடிய தற்காலிக மழலையர் பள்ளி ஆசிரியர்கள் தங்களுக்கான ஊதியம் குறித்து பல கோரிக்கைகளை வைத்திருந்த நிலையில் அவற்றிற்கான நெறிமுறைகள் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அங்கன்வாடி நிலையங்களில் காலை 9 மணி முதல் 12.30 மணி வரை அங்கன்வாடி மையங்கள் செயல்படுமென கூறப்பட்டுள்ளது. மழலையர் வகுப்புகளை எடுக்கக்கூடிய தற்காலிக சிறப்பாசிரியர்களுக்கு மாதத்தில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

மழலே பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக சிறப்பாசிரியர்களுக்கு அந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மேலாண்மை தகவல் முறைமை தளத்தில் பதிவுகளை மேற்கொண்டு அவர்களுக்கு பதிவு எண்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் இதுவரை EMIS என் பெறாத ஆசிரியர்கள் பள்ளி தலைமை ஆசிரியரின் மூலமாக பயன்பாட்டில் இருக்கக்கூடிய லாகினில் ஆசிரியர் உடைய விவரம் முழுவதையும் உள்ளீடு செய்து EMIS எங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் பெற்ற எண் விவரத்தினை மாவட்ட கல்வி அலுவலர் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleபொதுமக்கள் கவனத்திற்கு!! மே 1 முதல் மாறப்போகும் பேங்க் ரூல்ஸ்!!
Next articleஓய்வூதியத்தை அதிகரித்து முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு!!