ARAIGNAN KAYIRU BENEFITS: இடுப்பில் கட்டும் அரைஞாண் கயிறு கட்டுவதால் என்ன பயன் தெரியுமா?? 

Photo of author

By Divya

ARAIGNAN KAYIRU BENEFITS: இடுப்பில் கட்டும் அரைஞாண் கயிறு கட்டுவதால் என்ன பயன் தெரியுமா?? 

Divya

ARAIGNAN KAYIRU BENEFITS: Do you know what is the benefit of tying a rope around the waist?

ARAIGNAN KAYIRU BENEFITS: அரைஞாண் கயிறு கட்டுவதால் உடலில் பல நன்மைகள் உண்டாகுகிறது. அதை பற்றி இந்த பதவில் காணலாம்.

பிறந்த குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அரைஞாண் கயிறு கட்டுகின்றனர்.குறிப்பாக ஆண்களிடம் அரைஞாண் கயிறு கட்டும் பழக்கம் தொடர்கிறது.அரைஞாண் கயிறை தங்கம்,வெள்ளி மற்றும் வெறும் கருப்பு அல்லது சிவப்பு கயிறு என்று அவரவர் வசதிக்கேற்ப கட்டிக் கொள்கின்றனர்.

பிறந்த குழந்தைகளுக்கு ஏழாவது நாளில் இருந்து அரைஞாண் கயிறு கட்டப்படுகிறது.பெண்கள் அவர்கள் பூப்படையும் வரை அரைஞாண் கயிறு கட்டுகின்றனர்.ஆண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அரைஞாண் கயிறு கட்டுகின்றனர்.

மூட நம்பிக்கை,சம்பிரதாயம் போன்ற காரணங்களால் அரைஞாண் கயிறு கட்டப்படுகிறது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் உண்மையால் அரைஞாண் கயிறு கட்டுவதற்கு பின்னால் மருத்துவ குணங்கள் இருக்கிறது என்பதை அறியாதவர் பலர்.

அரைஞாண் கயிறில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள்:

1)[பெரும்பாலான ஆண்களுக்கு உடல் எடை அதிகரிப்பால் குடல் இரக்க நோய் ஏற்படுகிறது.இந்த குடல் இரக்க நோய் வராமல் இருக்க அரைஞாண் கயிறு கட்டப்படுகிறது.

2)ஆண்மை பிரச்சனை ஏற்படாமல் இருக்க அரைஞாண் கயிறு கட்டப்படுகிறது.

3)அரைஞாண் கயிறு கட்டுவதால் சிறுநீரக கோளாறு ஏற்படாமல் இருக்கும்.

4)கருப்பு நிற அரைஞாண் கயிறு கட்டுவதால் எதிர்மறை சக்திகள் உங்களை அண்டாமல் இருக்கும்.தங்கள்,வெள்ளியில் செய்யப்பட்ட அரைஞாண் கயிறை விட கருப்பு கயிறு கட்டுவதால் பல நன்மைகள் உண்டாகும்.

5)குழந்தைகளின் எடை மற்றும் அவர்களின் வளர்ச்சியை அரைஞாண் கயிறு மூலம் அறிய முடியும்.