தொழில் செய்யும் இடத்தில் கண் திருஷ்டி பட்டுவிட்டதா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள் போதும்!

0
172
#image_title

தொழில் செய்யும் இடத்தில் கண் திருஷ்டி பட்டுவிட்டதா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள் போதும்!

தொழில் போட்டி, பொறாமை அதிகம் இருக்கும் நபர்களால் கண் திருஷ்டி பட அதிக வாய்ப்பு இருக்கின்றது. இந்த கண் திருஷ்டி நீங்க சில பரிகாரத்தை செய்வது நல்லது. இந்த பரிகாரம் கண் திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் ஆகியவற்றை நீக்கி தொழிலில் முன்னேற்றத்தை மட்டுமே கொடுக்கும்.

என்ன பரிகாரம்? எவ்வாறு செய்வது?

வெண்கடுகு பரிகாரம்…

இந்த பரிகாரத்தை வாரத்தில் எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு சிறிய பித்தளை அல்லது செம்பு தட்டில் சிறிது வெண் கடுகு வைத்துக் கொள்ளவும். அதன் மீது ஒரு அகல் வைத்து நெய் ஊற்றி தீபம் ஏற்றி வியாபாரம் செய்யும் இடத்தின் வாசல் பகுதியில் வைக்கவும்.

இந்த தீபம் அனைவரின் பார்வை படும் இடத்தில் வைக்க வேண்டும். இந்த தீபத்தை வாரத்தில் 2 அல்லது 1 நாள் ஏற்றி வைத்து கண் திருஷ்டி நீங்கி தொழில் வளர்ச்சி அதிகரிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டுவேலையை தொடங்கவும்.

விளக்கு எரிந்து முடிந்த உடன் வெண் கடுகை யார் காலும் படாத இடமாக பார்த்து கொட்டி விடவும்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வர நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.