உங்களுக்கு சாபம் விடப்பட்டு இருக்கிறதா? பித்ரு சாபத்தில் இருந்து நீங்க எளிய பரிகாரம்!!

0
34
#image_title

உங்களுக்கு சாபம் விடப்பட்டு இருக்கிறதா? பித்ரு சாபத்தில் இருந்து நீங்க எளிய பரிகாரம்!!

சாபங்களை நாம் நேரடியாக பெறாவிட்டாலும் நம் முன்னோர்கள் இந்த சாபங்களைப் பெற்றிருந்தால் அது வம்சா வழியாகத் தொடர்ந்து தலைமுறை சாபமாக மாறி நம்மையும் நம் சந்ததியையும் தாக்கிக் கொண்டு தான் இருக்கும்.

இப்படிப்பட்ட சாபங்கள் நம் கஷ்டம் / பிரச்சனைகள் / துன்பம் / துயரம் அனைத்திற்கும் காரணமாக இருந்து நம் முன்னேற்றத்தையும், செல்வ வளத்தையும், புத்திர பாக்கியத்தையும், திருமண யோகத்தையும், கல்வி செல்வத்தையும் இன்னும் பல விதமான விஷயங்களையும் பாதித்து அனைத்திற்கும் தடையாக இருக்கும்.

பல வகையான சாபங்களில் இந்த 11 சாபங்கள் மிகவும் பாதிப்புகள் தரக் கூடியவை. அவை பெண் சாபம், பித்ரு சாபம், பிரம்ம சாபம், சர்ப்ப சாபம், கோ சாபம், கங்கா சாபம், விருக்க்ஷ சாபம், தேவ சாபம், முனி சாபம், ரிஷி சாபம், குல தெய்வ சாபம் ஆகியவை.

இப்படி ஏதும் சாபம் நமக்கு இருக்கிறதோ என்று ஜாதகத்தின் மூலமோ அல்லது வேறு விதத்திலோ கண்டறிந்து அதிலுருந்து விடுபட வேண்டும்.

பித்ரு சாபம்: ஏன் நம்மைத் தொடர்கிறது…

நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யாமல் இருப்பதும், நம் முன்னோர்கள் அவர்கள் தாய், தந்தைக்கு தர்ப்பணம் செய்யாமல் விட்டு இருந்தாலும் நம்மை பாதிக்கும்.

நம் தாய் தந்தையை தாத்தா பாட்டியை சரியாக கவனிக்காமல் இருப்பது, சரியான வசதி செய்து கொடுக்காமல் விட்டு விடுவது, முதியோர் இல்லத்தில் சேர்ப்பது ஆகியவை.

பித்ரு சாபம்: என்ன விளைவுகளை ஏற்படுத்தும்..

ஆண் வாரிசு இல்லாமல் போகும். பல பேருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காது. அப்படி கருவுற்றாலும் கரு அடிக்கடி கலைந்து போகும் சூழல் உருவாகும்.

பித்ரு சாபத்தில் இருந்து விடுபடுவது எப்படி?

ஒவ்வொரு அமாவாசைக்கும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து படையல் இட்டு பின் நாம் சாப்பிடுவது. முடியாதவர்கள் ஆடி, தை, மஹாளய அமாவாசைக்காவது இப்படி செய்யலாம். அதேபோல் முதியோர் இல்லத்திற்கு உணவு வழங்குதல் உள்ளிட்டவைகள் செய்வதன் மூலம் பித்ரு சாபத்தில் இருந்து விடுபட முடியும்.