தீர்க்கவே முடியாத கஷ்டத்தால் அவதிப்படுகின்றீர்களா! உடனடியாக இந்த விரதத்தையும் விளக்கையும் ஏற்றுங்கள்!

0
182

தீர்க்கவே முடியாத கஷ்டத்தால் அவதிப்படுகின்றீர்களா! உடனடியாக இந்த விரதத்தையும் விளக்கையும் ஏற்றுங்கள்!

அனைவரும் அவரவர்களின் வீட்டில் தினம்தோறுமோ அல்லது விசேஷ நாட்களிலோ விளக்கு ஏற்றுவது என்பது வழக்கம் தான். நாம் வேண்டுதல் வைத்த உடனே நிறைவேற வேண்டும் என்று அனைவருக்கும் ஆசை இருக்கும்.

இவ்வாறு நான் வைக்கும் வேண்டுதல் உடனடியாக நிறைவேற ஏகாதசி விரதமும் திருவோண விரதம் இருந்தாலே போதுமானது. நம்மளால் சரி செய்யவே முடியாது என்று நினைத்துக் கொண்டிருக்கும் கஷ்டத்திலிருந்து விடுபடுவதற்கு என்ன செய்வது என்பதை இந்த பதிவு மூலம் காணலாம். மாதந்தோறும் ஏகாதசி என்பது வரும். அவ்வாறு மாதத்தில் வரும் ஏகாதசி விரதம் மற்றும் திருவோண விரதம் இதில் ஏதேனும் ஒன்றை கடைபிடித்து வர வேண்டும்.

அப்படி விரதம் இருந்து வரும்பொழுது படிப்படியாக நம்முடைய கஷ்டங்கள் குறைந்து வரும். போது விஷ்ணு ஆலயத்திற்கு சென்று மகாவிஷ்ணுவுக்கு துளசிமாலை அணிந்து வழிபடலாம். அதனை எடுத்து நெய் வாங்கி கொடுக்கலாம். ஹோமம் என்பது நினைத்த நேரத்தில் வீட்டில் செய்ய முடியாத ஒன்று. அதனால் பஞ்சகவ்விய விளக்கை ஏற்றலாம்.

மேலும் கிராமப்புறங்களில் இருந்தால் தினம் தோறும் வீட்டிற்கு சாணம் தெளித்து கோலமிடுவார்கள் ஆனால் நகரப்புறங்களில் இருப்பவர்கள் அவ்வாறு செய்ய முடியாத நிலையில் வீட்டில் பஞ்சகவ்ய விளக்கு ஏற்றலாம். வரம் தோறும் வெள்ளிக்கிழமை அன்று   தீபம் ஏற்ற வேண்டும்.