பாத வெடிப்பினால் அவதிப்படுகின்றீர்களா! இதனை செய்தால் மட்டும் போதும்!

0
79

பாத வெடிப்பினால் அவதிப்படுகின்றீர்களா! இதனை செய்தால் மட்டும் போதும்!

தற்பொழுது பனிக்காலமும் மழைக்காலமும் பேருந்து வருவதனால் ஒரு சிலருக்கு பாத வெடிப்பு படர்தாமரை போல கால்களை ஈரப்பதத்தினால் புண்கள் போன்றவைகள் ஏற்படும். அதனை எவ்வாறு சரி செய்வது என்றும் இந்த பதிவின் மூலம் காணலாம்.

பொதுவாக பாத வெடிப்பு பெண்களுக்குத்தான் அதிகளவு ஏற்படுகிறது. அதனால் பெண்கள் அவர்கள் விரும்பிய காலணியை அணிய முடியாமலும் ஒரு இடத்திற்கு செல்வதற்கும் கூச்சம் கொண்டுள்ளனர்.

அதற்கு காரணம் பாதத்தில் ஈரப்பதம் குறைவதனால் விரிசல் ஏற்படுகிறது.பாத வெடிப்பு வலி மற்றும் ரத்தக் கசிவு உருவாக்கவும் வாய்ப்புண்டு. அதற்கு காரணமாக ஈரப்பதம் குறைவு வைட்டமின்,மினரல் சத்துக்கள் குறைபாடு, தைராய்டு, நீரழிவு உடல் பருமன், நீண்ட நேரம் நிற்பது போன்றவைகளாலும் பாத வெடிப்பு ஏற்படுகிறது.

வாழைப்பழம்:

வைட்டமின் ஏ சத்து நிறைந்த வாழைப்பழத்தை சருமத்தின் நீளும் தன்மையை மற்றும் ஈரப்பதத்தை பாதுகாக்க உதவுகின்றது. வாழைப்பழத்தை நன்கு மசித்து அதனை பாதங்களில் தடவி 20 நிமிடங்கள் விட்டு கழுவினால் பாத வெடிப்பு குணமாகும்.

தேன்:

தேன் என்பது பொதுவாகவே கிருமி நாசினியாக கருதப்படுகிறது. பாத வெடிப்பை குணமாக்கவும் சருமத்திற்கு புத்துணர்ச்சியை தருவதற்கும் தேன் உதவுகிறது. அதனை வெதுவெதுப்பான நீரில் தேனை கலந்து அதில் பாதங்களை ஊற வைத்து 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

கற்றாழை:

இரவு நேரத்தில் தூங்க செல்வதற்கு முன்பு கற்றாழையை பாதங்களில் தடவி காலுறை அணிந்து கொண்டு தூங்க வேண்டும் காலை எழுந்தவுடன் பாதங்களை கழுவி வந்தால் ஒரு வாரத்தில் வறண்ட பாதங்கள் மற்றும் பாத வெடிப்புகள் மறையும்.

author avatar
Parthipan K