மனைவியுடன் ஏற்பட்ட தகராறு… மனைவியின் விரலை கடித்து தின்ற கணவன்… 

0
77

 

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு… மனைவியின் விரலை கடித்து தின்ற கணவன்…

 

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கோவத்தின் உச்சத்திற்கு சென்ற கணவன் மனைவியின் விரலை கடித்து தின்ற சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

பெங்களூரில் திருமணம் ஆகி 23 ஆண்டுகள் கழிந்த நிலையில் புஷ்பா விஜயகுமார் தம்பதியனர் வசித்து வந்தனர். கணவன் விஜயக்குமார் மனைவி புஷ்பாவை திருமணம் ஆனது முதலே மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் சித்ரவதை செய்து வந்துள்ளதாக கூறப்படுகின்றது. கணவன் விஜயகுமார் அவர்களின் சித்ரவதையை தாங்க முடியாத மனைவி புஷ்பா அவர்கள் மகனுடன் தனியாக ஒரு வீட்டால் வசித்து வந்துள்ளார்.

 

இந்நிலையால் தனியாக வசித்து வரும் மனைவி புஷ்பா அவர்களின் வீட்டுக்கு சென்ற கணவர் விஜயக்குமார் மனைவி புஷ்பாவிடம் வாக்குவாதம் செய்துள்ளார். ஒருக் கட்டத்தில் இருவருக்கும் இடையே பிரச்சனை பெரியதாகி வாக்குவாதம் முற்ற கணவர் விஜயகுமார் மனைவி புஷ்பாவின் இடது கையை பிடித்து விரலை கடித்து தின்றதாக கூறப்படுகின்றது.

 

விரலை கடித்து தின்றது மட்டுமில்லாமல் கணவர் விஜயகுமார் மனைவி புஷ்பாவிடம் “விரலை கடித்து தின்றது போலவே உன்னையும் கொலை செய்து தின்று விடுவேன்” என்று கூறியுள்ளார்.

 

இதையடுத்து பயந்து போன புஷ்பா அவர்கள் காவல் நிலையத்தில் கணவர் விஜயகுமார் மீது புகார் அளித்தார். இதையடுத்து காவல்துறையினர் புஷ்பா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட.அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.